• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

VIDUKATHAIYAI NAAN-3(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
வெளியில் சென்றவன் மனம் முழுக்க அவளே நிறைந்திருந்தாள் ....


தாயிடமிருந்து தப்பித்து கொள்ள வெளியில் சென்றவனால் அவள் நினைவுகளில் இருந்து தப்பிக்க

இயலவில்லை.

அவளுக்காக !!!!!பார்க்கும் வரங்களை எல்லாம் தட்டிக்கழித்தான்....

கிட்டத்தட்ட அவனின் 15 வயதிலிருந்து ஆரம்பித்தது அவனின் இந்த போராட்டம்....

அந்த கண்கள்....அவள் முகம் அவனுக்கு தெரியாது...ஏன் அவள் யாரென்றே தெரியாது...

அவளை ஒருமுறை கூட பார்த்ததில்லை....அவன் கண்டதெல்லாம் கனவில் வரும் அந்த கண்ணீர் கறை

கொண்ட நீல விழிகளை ....

ஏன் இப்படி செய்துவிட்டாய் என அவனை பார்த்து கேட்பது போன்று இருக்கும்................


ஆரம்பத்தில் அது வெறும் கனவு என்று மட்டும் நினைத்தான்.....ஆனால் வாரத்தில் ஒரு முறையேனும் அந்த

கண்கள் அவன் கனவில் வந்துவிடும்.....


அந்த கண்களை அவனையும் அறியாமல் விரும்ப ஆரம்பித்தான்.........


அதை ஓவியமாக வரைந்து வைத்திருந்தான்........அவளை தவிர வேறு எந்த பெண்ணையும்

மனதால் கூட நினைத்ததில்லை.....


தன்னுடைய தாயிடம் கூட அவன் இதுபற்றி கூறியதில்லை.


"அம்மா...எனக்கு மட்டும் mariiage பண்ணணும்ன்ற எண்ணம் இல்லியா ???? ஆனா அவள தவிர வேற ஒரு

பொண்ண என்னால நினச்சு கூட பாக்க முடில........... அவ எங்க இருக்கானு தெரில...ஏன் என் கனவுல மட்டும்

வரான்னு தெரில....ஏன் அவ முகம் கூட எப்படி இருக்கும் னு தெரில....நான் பாத்ததில்லை ..........ஆனா அவ


வருவான்னு நம்பிக்கை இருக்கு...19 வர்ஷம் அவ கண்ண பாத்துக்கிட்டே வாழ்ந்த்துட்டு இருக்கிற என்னால


எப்படிம்மா இன்னொரு பொண்ண கல்யாணாம் பண்ண முடியும்.... இதெல்லாம் உங்க கிட்ட எப்படி நான் பேச


முடியும்.....எனக்கு என்னவோ ஆயிடிச்சினு நீங்க பயந்துடுவீங்க..........அவ ஏன் என்ன தேடி வரலன்னு

தெரில.............அவளுக்காக 60 வயசு வரைக்கும் கூட காத்துட்டு இருப்பேன்.....அதுவரைக்கும் அவளை யாரும்

நெருங்க விட மாட்டேன்...அவ எனக்கானவ...அவளை யாருக்காகவும் விட்டு குடுக்க மாட்டேன்.... " என்று

பித்துபிடித்தது போல் காருக்குள் உளறிக்கொண்டிருந்தான்..........


சிறுது நேரம் மனதை ஒருநிலைப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.....காரை மருத்துவமனை

செலுத்தினான் ......................
......................................................................................................................................................................................................


உதகமண்டலம் :


ஹேய் சீக்கிரம் எந்திரிடி....எவ்ளோ நேரம் எழுப்புறது ...நான் என்ன உன் ரூம் மேட் ஆஹ் இல்ல

பொண்டான்டியா .................எப்போ பாரு லேட்டா எழும்புறது..........monkey .....உன் கூட போராடனும்னு என்

தலையெழுத்து..............


அடியே !!!!இப்போ நீ எழுந்திரிக்கலனா.................நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்...அந்த பண்ணி வாயன்

கிட்ட நீ தான் திட்டுவாங்கணும்.....

"ஏய் !!!!போயிடாத இருடி ....." வேண்டா வெறுப்பாக எழும்பினாள் கேத்தரின்....

இருபத்தி இரண்டு வயது நிரம்பிய வளர்ந்த குழந்தை......

நீல கண்கள் ....சுருண்ட முடி....பால் நிறம்....ஒல்லியான உடல்வாகு....அளவான உயரம்.....நைட் பாண்ட் , ஷர்ட்

அணிந்திருந்தாள்...

ஏண்டி காலைலியே அந்த பண்ணி வாயன ஞாபகப்படுத்துற.................ம்ம்....அவனுக்கு உன்ன கல்யாணம்


பண்ணி வைக்கத்தான்....போயும் போயும் அவன் கூட compare பண்றே.....உன்ன......சரி...தாயே....போய்

குளிச்சிட்டு சீக்ரம் வா....இல்லனா உன் டார்லிங் அந்த பண்ணிவாயன் கிட்ட திட்டுவாங்கணும் லேட்டா

போனோம்னு.....

மறுபடியும் மறுபடியும் அவனை என் டார்லிங் னு சொல்லாத.....அப்புறம் உனக்கு சாபம் குடுப்பேன்...அவன்

தான் உன் குழந்தைகளுக்கு அப்பாவா வருவான்னு .............ஏய் !!!!உனக்காக வெயிட் பன்னேன்லே என்ன

சொல்லனும் ... நீ தனியா வந்துக்கோ ...நான் கிளம்புறேன்..............ஏய் சாரி டி விட்டுட்டு போகாத....நான் ஒரு 10

மினிட்ஸ் ல வந்துடுறேன்.....



ம்ம்...அந்த பயம் இருக்கனும்.....அவளுக்காக காத்திருந்தவள் நினைவுகள் புன்னகையுடன் சற்று பின்

நகர்ந்தது.....அந்த காப்பகத்துக்கு மீரா வரும் போது அவளுக்கு 5 வயது...தாய் இறந்ததால், தந்தை இரண்டாவது

திருமணம் செய்து கொண்டார். அவளால் மீராவை வளர்க்க முடியவில்லை என்று உதகமண்டலத்தில் உள்ள

குழந்தைகள் காப்பகத்திற்குள் சேர்த்தனர்.....அழுதுகொண்டே தந்தையை விடாமல் பிடித்து கொண்டாள்

...அப்பா என்ன விட்டுட்டு போகாதீங்க.....நான் நல்ல பொண்ணா நடந்துக்கிறேன்...அம்மா எங்கன்னு

கேட்கமாட்டேன்....ப்ளீஸ் பா...

எதுவும் செய்ய இயலாமல் விட்டு சென்றார்....அழுதுகொண்டே இருந்தவள் தோளில் ஒரு பிஞ்சு கரம்

தொட்டது.....யார் என்று திரும்பியவள் கண்ணில் அந்த நீல நிற கண்களே முதலில் பட்டது....சற்று

வித்யாசமாக எண்ணினாள் சுருட்டை முடியுடன் இருந்த அந்த குழந்தை அவளுக்கு ஆறுதல் சொல்லியது....


அழாதே.....என்ன மாதிரி நீயும் god டோட பாப்பாவா ..................புரியாத மீரா.."அப்படீன்னா.............."

இங்க இருக்க எல்லோரும் god டோட பாப்பானு மதர் சொன்னாங்க....இப்போ நீயும் இங்க வந்துட்ட....so நீயும்

god டோட பாப்பா வாயிட்ட .......................ம்ம்....என்னோட அம்மா சாமிகிட்ட போய்ட்டாங்க.....இப்போ அப்பா

என்ன சாமியோட பாப்பாவா விட்டுட்டு போய்ட்டாங்க....

அது ..உங்க அப்பாவா...............ம்ம்....ஆமாம்.....உன்னையும் உன் அப்பாதான் இங்க விட்டாங்களா


...................இல்ல ..நான் சின்ன பேபி ஆ இருக்கும் போதே இங்க தான் இருக்குறேன்.....என்னோட அம்மா, அப்பா


சாமிகிட்ட இருக்காங்கனு மதர் சொன்னாங்க...


'அப்படி ஆரம்பித்தது இருவரின் நட்பு............மீரா அமைதியுடன் இருப்பாள்.....கேத்தரின் துறுதுறு பெண்ணாக

வளர்ந்தாள் ..................இருவரும் படிப்பில் சுட்டியாக இருந்ததால் scholarship வழியாக இன்ஜினியரிங் படிப்பை


முடித்தனர்...அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தனர்.... கல்லூரி கேம்பஸ் இன்டெர்வியூவில் தேர்வு

பெற்று கடந்த ஒரு வருடமாக ஒரு IT கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்...'


'என்ன அந்த பண்ணி வாயன நெனச்சி கனவு கண்டுட்டு இருக்கியா.....' அடி கழுதை ......உன்ன .....கேத்தரின்

சிரித்து கொண்டே ஓடினாள் ....இருவரும் வேகமாக அலுவலகம் சென்றனர்...வழக்கம் போல் அன்றும்

தாமதமாக சென்றதால் ....மேனேஜர் மனோஜீடம் ( அவர்கள் மொழியில் பண்ணி வாயன்) டோஸ்

வாங்கிவிட்டே சென்றனர்....இவன் பொண்டாட்டி கிட்ட சொல்லி இவன் சாப்பாட்டுல பெவிகால் வைக்க


சொல்லணும்...அப்போதான் இவன் வாய மூடுவான்.....


பேசி அரட்டை அடித்தவாறே உள்ளே சென்றனர்........................................


................................................................................................................................................................................................................


நேரே mercy hospital குள் நுழைந்தது ரிஷியின் BMW ....சாவி யை வணக்கம் தெரிவித்த செக்யூரிட்டி கையில்

பார்க்கிங் பண்ண கொடுத்தவன்...கம்பீரமாக உள்ளே நுழைந்தான் எதிரே வணக்கம் தெரிவித்தவாறு

வந்தவர்களுக்கு தலை அசைத்தவாறே சென்றான்..... ... 8 அடுக்குகளை கொண்டது அந்த

மருத்துவமனை.....


லண்டனில் M .S முடித்த கையோடு சென்னை திரும்பியவன் தந்தையிடம் தன் விருப்பத்தை

கூறவே , அவரால் அமைத்து கொடுக்கப்பட்ட மருத்துவமனை தான் mercy .....அமைத்து கொடுத்தது மட்டும்

தான் அவனின் தந்தையின் பணி ...அதன்பின் ஒன்பது வருடங்களாக அதை திறன்பட நடத்தியது ரிஷியின்

திறமை.......தலை சிறந்த கார்டியோலோஜிஸ்ட் ஆக உருப்பெற்றான் ....வெளிநாடுகளில் இருந்து வந்து


அவனிடம் treatment பெறுபவர்கள் ஏராளம்.........வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை

செய்தான்.....


என்னடா மச்சான்...ஏதோ அப்செட் ஆஹ் தெரியுற....எதிரே வந்தவரே கேட்டான் .....ரிஷியின் நண்பனும்

மருத்துவருமான சந்தோஷ்...

ம்ம்....ஒன்னும் இல்ல... nothing டா.....உன் வாய்தான் அப்படி சொல்லுது.....

அம்மா marriage பத்தி பேசுனாங்க.....அதுதான்............அம்மா கல்யாணம் பத்தி பேசாம.................காசி

யாத்திரையை பத்தியா பேசுவாங்க................

புள்ள குட்டிங்க அப்பான்னு கூப்பிடவேண்டிய வயசுல ..நீ ஹப்பான்னு உக்காந்து இருக்கிற.....உன் கிட்ட

நார்மலா பொண்ணுங்க பேச வந்தாலே, அப்பிடியே அகத்திய முனிவர் கண்ணால எரிக்கிற மாதிரியே

பாக்குற..... நீ எல்லாம் தேறாதே கேஸ் டா....


நான் தேறுறது இருக்கட்டும்.....நீ போய் patients அ பாரு.......ம்ம்....இப்படியே வாய அடைச்சிடு.....சரிடா நேத்து

அந்த வயசான பாட்டிக்கு .......................என்று வேலையில் ....இறங்கினர்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜூலியானா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top