• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

VIDUKATHAIYAI NAAN- 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
ரோட்டின் ஓரம் இருந்த டீ கடையில் பெற்றோருடன் சேர்ந்து நின்று கொண்டிருந்த குழந்தை திடீரென்று

கீழிறங்கி ரோட்டை நோக்கி செல்வதை அவர்கள் அறியவில்லை....அதை எதேச்சையாக பார்த்த கேத்தரின்

குழந்தையை காப்பாற்ற ஓடினாள்...வண்டி மோதிவிடக்கூடாதென்று வேகமாக ஓடினாள்....

சரியான வேகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ரிஷி எதிரே ஒரு குழந்தை ரோட்டில் வருவதை பார்த்து சட்டென

பிரேக்கை அழுத்தினான்....அந்நேரம் கேத்தரின் வேகமாக வந்து குழந்தையை தூக்கினாள்...

அவனுக்கு கோபம் வந்தது....குழந்தை ரோட்டுக்கு வர வரைக்கும் என்ன பண்ணிட்டிருப்பாங்க....


அவள் திருப்பி நின்று குழந்தையை தூக்கி வைத்து கொண்டிருந்தாள்...


கோபமாக கீழே இறங்கியவன் உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லியா....குழந்தை பக்கத்துல

இல்லாதது கூடவா தெரியாது....அப்படி என்ன நினைப்புல தான் இருக்கீங்க....குழந்தையை பெத்தா மட்டும்

போதாது.....அத பொறுப்பா பாத்துக்க தெரியணும்...அப்படி இல்லனா குழந்தையை பெத்துக்காதீங்க...இடியட் .......

பயந்த குழந்தையை தட்டி கொண்டிருந்தவள் சட்டென்று திரும்பினாள்....அந்நேரம் சிறுமியின் அம்மா, அப்பா

பதட்டத்துடன் வந்தனர்....பாப்பா.....பாப்பா ...ஐயோ !!!உனக்கு அடிபட்டுச்சா !!! குழந்தை பயத்தில் அவளோடு
ஒட்டிக்கொண்டது.....இவர்களிடம் செல்லவில்லை....

ம்ம்....உங்க பேபி கு ஒன்னும் ஆகல....குழந்தையை வெளிய கூட்டிட்டு வரப்போ careful ஆஹ் பாத்துகோங்க
...நல்ல வேளை அவரு கரெக்ட் timeக்கு பிரேக் போட்டாரு...இல்லனா என்னாயிருக்கும் ....


ரொம்ப தேங்க்ஸ் மா.....இனி இப்படி நடக்காம பாத்துகிறோம்....வா செல்லம் ...என்று கிளம்பினர்...


அங்கு நின்று கொண்டிருந்தவனிடம் வந்தவள்,,,

நீங்க பேசுனது கரெக்ட் தான்....ஆனா அவசப்பட்டு என்ன நடந்துச்சின்னு தெரியாம பேசிட்டிங்க...................


இப்படி யோசிக்காம ....யாரை என்ன வேணுனாலும் பேசிடாதீங்க....இப்போ நீங்க தான் இடியட் ஆனீங்க....


அவள் பேசும் பொழுது அந்த கண்களையே நோக்கி கொண்டிருந்தான்......அவள் என்ன கூறினாள் என்பது கூட

அவனுக்கு தெரியாது.....

அவனிடம் பதில் ஏதும் வராமல் போகவே .....என்ன என்பது போல் சலித்து விட்டு


திரும்பினாள்...திரும்பியவுடன் கைகளை பிடித்து நிறுத்தியவன் முகத்தை பிடித்து திருப்பினான்....


இதை சற்றும் எதிர் பார்த்தவள் ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டாள் ...


பொறுக்கி ! அறிவில்ல ...நடு ரோட்டில கைய பிடிச்சி இழுக்கிற....முகத்தை தொடுற....அதுவும் இவ்ளோ ஆளுங்க இருக்காங்க.....கொஞ்சம் கூட பயம் இல்லாம ....என்ன BMW கார்ல வந்தா பெரிய இவனா நீ???

உன்னயெல்லாம் இந்த மாதிரி தருதலையா....பெத்து வளத்தவுங்கள சொல்லணும்....



அப்பொழுதுதான் நடப்புநிலைக்கு வந்தவன் ,என்ன செய்தான் என்று உணர்ந்தவனாய் , சாரி !!!really சாரி!!!!

நா....என்ன பத்தி தப்ப நெனச்சிட்டு பேசுற...நான் அப்படி பட்டவன் இல்ல..


என்ன அப்படி பட்டவன் இல்ல! பெரிய யோக்கியன் மாதிரி பேசுற.....


தான் பார்க்க துடித்து கொண்டிருந்த தன்னவளின் முன் கூனி குறுகி நிற்பதை அவனால் தாங்கிக்கொள்ள

முடியவில்லை.....

சுற்றி நின்றவர்கள் வேடிக்கை பார்க்க,,,அவமானமாக உணர்ந்தவன் சாரி!!!மன்னிச்சிடுமா....என்று வேகமாக

காரை எடுத்து சென்று விட்டான்......

அவளும் கோபமாக அங்கிருந்து புறப்பட்டாள் .........


காரில் சென்று கொண்டிருந்தவன் மனம் அவளை கண்ட மகிழ்ச்சியில் சந்தோசம் கொள்வதா....இல்லை யாரை

நினைத்து இவ்வளவு நாள் ராமனை போல் வாழ்ந்து கொண்டிருந்தானோ.....அவள் வாயாலே ...பொறுக்கி என்று

பெயர் வாங்கிய விதியை நினைத்து கவலை கொள்வதா ..என்று தெரியவில்லை ...அந்த கண்களை கண்ட

அவன் தன் இதயம் இருப்பது அவளிடம் தான் என்பதை உணர்ந்து கொண்டான்....அவள் பார்வையை

திரும்பியவுடன் அதை எதிர்பார்க்காத அவன் அந்த கண்களில் மறுபடியும் தொலைய எண்ணித்தான் அவள்

கையை பிடித்து நிறுத்தி , அவள் முகத்தை பிடித்து திருப்பியது.....ஆனால் அந்த செயல் அவனை வேறு


விதமாய் காட்டியது....



மறுநாள் காலையில் ஜாகிங் முடித்துவிட்டு திரும்பிய ரிஷியின் கையில் அழுத முகத்துடன் அன்றைய

தினசரியை நீட்டினார் அவனின் தாய் பானுமதி ...என்ன மா....ஏன் அழுறீங்க....என்ன தம்பி இது!!!!இந்த பேப்பர்ல ...

கன்னத்தில் அரை வாங்கிய பிரபல மருத்துவர் னு உன்ன ஒரு பொண்ணு அடிக்கிற மாதிரி நியூஸ்

வந்துருக்கு.....யாருப்பா ...அது...

வாங்கி படித்தவன் முகமும் அதிர்ச்சியையும் அவமானப்பட்ட வலியையும் காட்டியது....


என்னடா நடக்குது....என் பையன் எப்படிப்பட்டவனு என்னக்கு தெரியும்....ஆனா ஏன் இப்படி ஒருத்திகிட்ட

அடிவாங்கிட்டு நிக்குறானு எனக்கு தெரில..........சொல்லு பா.....

நானோ , உன் அப்பாவோ இதுவரைக்கும் உன்ன திட்டி கூட பேசுனதில்ல....அம்மா!!!!எனக்கு....எதோ

எதிர்பாராத விதமா இப்படி நடந்திருச்சு....நான் எனக்கு தெரிஞ்சவுங்கன்னு நெனச்சி அந்த பொண்ண

திருப்புனேன்....ஆனா அது வேற விதமாய்டிச்சி........என்ன சொல்றேன்னு எனக்கு புரில ....................அம்மா!!இத


இப்படியே விட்டுடுங்க....உங்க பிள்ளைய நீங்க நம்புறீங்க தானே.......அந்த கடவுளே உன்ன பத்தி தப்பா

சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்...இதுபோதும்மா எனக்கு..................நீங்க இத பத்தி ஒர்ரி

பண்ணிக்காதீங்க...நான் பாத்துக்கிறேன்...

..............................................................................................................................................................................................................
ஹேய்!!! என்னடி இது சென்னை வந்த ஒரு நாளைல நீ ரொம்ப பேமஸ் ஆயிட்ட.....பேப்பர் ஐ பார்த்த வண்ணம்


கேத்தரினுடன் கேட்டுக்கொண்டிருந்தாள் மீரா.....



ஆனா ஆள் பாக்க நல்லா ஸ்மார்ட் ஆஹ் இருக்காரு...


அதென்ன இருக்காரு....அந்த பொறுக்கிக்கு என்ன மரியாதையை வேண்டி கெடக்கு....அவன்னு சொல்லு...



என்ன இருந்தாலும் ஒரு டாக்டர்...அதுவும் ரொம்ப பிரபலமானவராமே ................இப்படிப்பட்டவனுங்க தான்


இந்த மாதிரி சீப் ஆன வேலையெல்லாம் பண்ணுவானுங்க....சரி சரி டென்ஷன் ஆகாத...விட்டு தள்ளு...நாம


இன்னும் இங்க ஒரு நாள் இருக்க போறோம்......ஹாப்பி ஆஹ் இருப்போம்....என்று கன்னத்தை கிள்ளினாள் ..


ஹேய் என்ன ஒடம்பு சுடுறமாதிரி இருக்குது.....ம்ம்...தெரில....உடம்பு வலியா வேற இருக்குது....காலைல


டேப்லெட் போட்டேன்....சரி நீ இன்னைக்கு மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டாம்...நேத்தே எல்லாம் ரெடி

பண்ணி மெயில் பண்ணிட்டல ,,, ம்ம்....அப்போ நான் inform பண்ணிக்கிறேன்...ரெஸ்ட் எடு....சாரி உன் கூட


இருந்து பாத்துக்க முடில...ரெண்டு பேருமே இல்லனா....கஷ்டமாயிடும்...ஒன்னும் பிரச்னைல்ல .....நான்

மேனேஜ் பண்ணிக்கிறேன்....ஹே ரொம்ப முடிலனா ஒரு கால் பண்ணுமா சொல்லிட்டு வந்துடறேன்...



...ம்ம்ம்...ஓகே டி

மருத்துவமனை சென்றவன் மனதில் அவளை பற்றிய எண்ணமே இருந்தது...இவ்வளவு நாள் இங்கிருந்தாள் ...


இப்பொது எங்கிருக்கிறாள் ..................அவளை பார்க்க வேண்டுமென்று இருந்தது....அத்தனை அவமானப்பட்டும்


அவள் மேல் துளி அளவும் கோபம் வரவில்லை.... ..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
JJ டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜூலியானா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top