• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 51.1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
"என்ன பெருசா கேரக்டர் இருக்க போகுதுனு நெனைச்சுட்ட இல்ல அதான்" என்றவளை அமருக்கு நிலாவும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

இப்போது அவளருகே வந்த அமர்

"சாய் !என்னடா இப்படியெல்லாம் பேசுற??? நான் அப்டி நெனைப்பேனா?? என்றவனிடம்

" நான் அப்டித்தான் பேசுவேன் நீ அப்டித்தான் நெனைச்சுட்ட!! வேண்டாம்... தேவை இல்லை யாரும் தேவை இல்லை ...நானும் எங்கம்மா போன இடத்துக்கே என சொல்லி முடிக்கும் முன் அவள் வாயை கையால் மூடிய அமர்

"சாய் நிறுத்துடா! ப்ளீஸ்! என்றான்.

ரிஷி நிலாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

நிலா ரிஷியிடம் 'மனசுல இவளோ லவ் வைச்சுட்டு இந்த அமரண்ணன் ஏன் இப்டி பண்ணனும்' என்றாள்.

"மனசுல உள்ள லவ் வெளிய சொல்லிட்டா தான் எந்த பிரச்னையும் இல்லையே "என்றான் நிலாவை பார்த்தவாறு...

நிலா 'ஹே லூசு! அவங்களை பத்தி பேசு நீ முதல" என்றாள்.

" அவங்களை பத்தி தான் சொன்னேன் நீ என்ன நெனைச்ச" என்றான் புருவம் தூக்கியவாறு ..

அங்கே அமர் சாய் சமாதானப்படுத்தி கொண்டிருந்தான்.

இங்கே ரிஷி நிலாவிடம் சொல்லி கொண்டிருந்தான்.


"அமர் சாய் அளவுக்கு வசதி இல்லாத குடும்பம் !கல்யாணம் குடும்பம்னு ஆனதுக்கப்றம் சாய் ஒரு வேளை நம்ம தகுதிக்கு கம்மியா கல்யாணம் பண்ணிட்டோம்னு நெனைச்சருவாளோனு??? ஒரு பயம் அமருக்கு "

"பார்ன் வித் சில்வர் ஸ்பூன் சொல்வாங்களே!! அதை மாதிரி தான் சாய் "அதான் அமரோட பயமே" என்றான் .

இங்கே அமரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்

"யூ இடியட்!! ஐ லவ் யூ! உனக்கு புரியலையா ???இதுல ஸ்டேட்டஸ் எங்கேருந்து வந்தது???

" அறிவிருக்கா நான் சின்ன பொண்ணுன்னு நினைச்சியா??? யோசிச்சு தான் நீ மட்டும் போதும்னு முடிவெடுத்தேன் டாம்மிட்"

" புரியல உனக்கு! என்றாள்.

அமரோ "இல்லடா நீ கஷ்டப்பட்டா என்னால தாங்க முடியாது!! அதுவும் எனக்காக னா ரொம்ப வலிக்கும்.
எனக்கு ..

"அதான் ஆரம்பத்துலயே வெலகிட்டா!பெருசா பாதிப்பு இல்லை பாரு" என கூறியவனை முறைத்தவள்..

" நான் தூங்கி எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா??? மடையா ஆல்ரெடி நீ எனக்குள்ள வந்துட்ட!!! நீ இல்லாம என்னால" என அழ தொடங்கியவளை தோளில் சாய்த்து கொண்டான் அமர்.

" வேண்டாம் டா ப்ளீஸ் நீ அழறத பாக்குற தெம்பு எனக்கில்லை" என்றான்.

அங்கே நிலாவிடம் ரிஷி "அவனோட இந்த கவலையை என்கிட்ட சொன்னவுடனே எனக்கு ஒன்னு தோணிச்சு நம்ம மலேஷியா பிரான்ச்க்கு அமரையே எம் டி ஆக்கிடலாம்னு"! என்றவன்

"இது நான் ஏதோ பெருசா செய்யணும்னு சொல்லல... என்னோட கஷ்ட நஷ்டத்துல என்னோடு நின்னவன்..

" ஹி இஸ் மோர் தான் மை பிரண்ட் மை பிரதர்" அப்பாகிட்ட கூட பேசிட்டேன் !என்றான்.


இப்போது ரிஷியை பாக்க பெருமையாக இருந்தது..

அசால்ட்டா அமைதியா பெரிய விஷயங்களை செஞ்சுட்டு போயிடறான்.

அதுக்கு கொஞ்சங்கூட கிரெடிட் எதிர்பாக்காம என நினைத்தவள். அவன் கையை பிடித்து ரிஷி என ஏதோ சொல்ல முயல

ரிஷியோ "சரி வா நான் இன்னும் இதை அமருக்கு சொல்லல!! கொஞ்சம் பொறுமையா தான் சொல்லணும்... ஒத்துக்க வைக்கணும்.. என்றவன் உள்ளே சென்றனர் இருவரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top