lakshmi2407
அமைச்சர்
அத்தியாயம் - 13
குழந்தைகளின் உலகம் மிக அழகானது, சுவாரசியமானது. அதில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது ஜாதி மத மாச்சரியங்கள் கிடையாது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேச அவர்களுக்கு நிச்சயமாய் தெரியாது. அவர்கள் தேசம் கடந்தவர்கள். உள்ளதை அப்படியே எடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை. பூக்கள் பூக்கும் நந்தவனத்தில். மல்லிகையை ரோஜா பழிக்குமா என்ன?., அந்நந்தவனத்தில் நங்கையின் அனுபவங்கள் அழகானவை... சுவாரஸ்யமானவை..., விவகாரமானவை...சில திகிலானவை.
ஒரு தமிழ் குழந்தை ஏழு வயதே நிரம்பிய பிள்ளை இவளது கிரீச்சில் சேர்ந்தது. பேச்சுவாக்கில், மங்கை தனக்குத் தமிழ் தெரியும் என்று சொல்லிவிட, "இவன் யு.கே.ஜி. வரைக்கும் தமிழ் படிச்சான். இப்போ இந்த ஒன்ற வருஷமா நான்தான் நேரம் கிடைக்கும்போது சொல்லித்தரேன். ஃப்ரீயா இருக்கும்போது கொஞ்சம் தமிழ் வேர்ட்ஸ் டிக்டேட் பண்ணுங்க ப்ளீஸ்", என்று குழந்தையின் அம்மா சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
அவ்வாறு ஒருநாள் அக்குழந்தையை தமிழ் வார்த்தைகளை எழுதச் சொல்லும் போது, நங்கை கூறிய வார்த்தை பாராட்டு. அப்பிள்ளை பா எழுதி, பிறகு ரா-வையும் யோசித்து எழுதியது, அதற்கு மேல் அவனுக்குத் தெரியவில்லை. எழுதுகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்த நங்கை, அவன் திருதிருவென முழிப்பதைப் பார்த்து, 'ட்' போட்டு 'டு' போடு என்றாள். பிறகு அ டு ஃ எழுது என்றாள்.
நந்தகுமார் என்ற அந்த சிறுவனும் சட்டென எழுதி முடித்து இருந்தான். "இவ்ளோ சீக்கிரம் எழுதிட்டானா?", யோசித்த நங்கை அவன் எழுதியதை சரிபார்க்க....., அப்பிள்ளையோ, "பாரா it 2" என்றும், "அ 2 ஃ" என்றும் எழுதியிருந்தான். அதை பார்த்த நங்கை முதலில் திகைத்தாலும்.... பின்னர் சிரிக்க ஆரம்பித்தாள். ட், டு என்று தமிழில் எழுதச் சொன்னால், அவன் ஆங்கிலத்தில் it-டையும், எண்களின் இரண்டையும் எழுதுவான் என்று கனவா கண்டாள்? அதையும்விட அ முதல் ஃ வரை எழுதச் சொன்னால்.... அ 2 ஃ என எழுதி, நங்கைக்கு "இப்பவே கண்ண கட்டுதே", என்ற உணர்வை கொடுத்தான் அந்தப் பிள்ளை.
ஒரு சீக்கிய பெண் பிள்ளை, பெயர் குர்ஷரன் கவுர், கிரீச்-ல் உள்ள ஒரு இஸ்லாமிய குழந்தையுடன் விளையாடுவதை வழக்கமாகிக் கொள்ள, அவள் அடிக்கடி சொல்லும் "இன்ஷா அல்லா", குர்ஷரனையும் தொற்றிக் கொள்ள... அது வீட்டில் பிரச்சனையை உருவாக்கி... விளைவு? மறுநாள் ..பெற்றோர், அவர்களது பெற்றோர் என அனைவரும் நேராய் நங்கையிடம் வந்து நின்றனர். அனைவரையும் அமர வைத்து என்ன விஷயம் என்று கேட்டாள்.
"நீங்க ஏன் முஸ்லிம் குழந்தைங்களோட எல்லாம் என் பிள்ளைய பழக விடுறீங்க, பாருங்க அவங்க பழக்கமும் இவளுக்கு வருது. வீட்ல முட்டி போட்டு தொழுகை பண்றா, இன்ஷா அல்லா-ன்னு எப்ப பாரு சொல்றா", என அவர்கள் புகாராய் சொல்லிக் கொண்டிருக்க.., நங்கையோ அப்பிள்ளையை பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றே வெளிறிய முகத்துடன், அன்னையின் கை பிடித்துக்கொண்டு அவரருகில், கொஞ்சம் பயத்துடன், புருவம் சுருக்கி உதடு பிதுக்கி அழுகத் தயாராக நின்றிருந்தாள், அச்சிறுமி.
நேரே அவள் அருகில் சென்று, "நீ ஷெரின் பண்ற மாதிரி வீட்ல நமாஸ் பண்ணினயாடா?", என்று கேட்க, அக்குழந்தை... அண்ணார்ந்து நங்கையைப் பார்த்து, "ம்ம்.." என்றது. அதற்குள்ளாகவே கண்களில் நீர் திரண்டு அழவே ஆரம்பித்தது.
"நோ பேபி அழக்கூடாது. இன்ஷா அல்லாவும் சொன்னீங்களா?", என்று முட்டி போட்டு அப் பிள்ளையின் உயரத்துக்கு குறைந்து, குழந்தையின் கைபிடித்து அவளருகே இழுத்து வைத்துக்கொண்டு கேட்க.., சற்று நம்பிக்கை வரப்பெற்ற அப்பிள்ளை இப்பொழுது அழுகையை நிறுத்தி இருந்தது. தேம்பிக் கொண்டே, "ம்ம்", என மண்டையை உருட்டியது.
"வெரி குட். அதோட அர்த்தம் என்னன்னு ஷெரின் சொன்னாளே, அத அம்மா கிட்ட சொல்லலையா?, சொல்லியிருந்தா உன்னை திட்டி இருக்கமாட்டாங்க., சொல்லுங்க அதோட அர்த்தம் என்ன?", என்று நங்கை கேட்டாள்.
"GOD இஷ்டப்படி", மிகச் சுருக்கமாய் அழகாய் கூறியது அக்குழந்தை. ஆம் அதன் அர்த்தம் அவ்வளவுதான்.. அப்பெண்ணிற்கும் (ஷெரின்) அவ்வாறே பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
"இப்போ சொல்லுங்க இன்ஷா அல்லா சொல்றதுல என்ன தப்பு இருக்கு?", என்று வந்திருந்த பெரியவர்களைப் பார்த்து கேட்டாள்.
பதிலளிக்க வார்த்தை ஏது?
"இவங்க சின்ன குழந்தைங்க, அவங்களுக்குள்ள இப்பவே மதத்தைப் புகுத்தி பிரிச்சு விட்டுடாதீங்க ப்ளீஸ், அல்லாஹ்-ன்னா உங்க பொண்ணுக்கு உங்க குருமார்கள் தான் ஞாபகம் வருவாங்க, நமாஸுக்கும், நம்ம பண்ற நமஸ்காரத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. விளக்கம் போதும்ன்னு நினைக்கிறேன்", பெரிய விளக்கம் கூறி முடித்தாள் நங்கை நல்லாள்.
இன்னொரு குழந்தையின் விஷயம்... சற்று விவகாரமானது. பத்து வயது நிரம்பிய பெண் பிள்ளை, சற்றே போஷாக்கான பிள்ளையும் கூட. , வளர்ச்சியும் சற்று அதிகமே. பள்ளி முடிந்து மூன்று மணிக்கெல்லாம் வரவேண்டிய குழந்தை, சில நாட்களாய் தொடர்ந்து அரை மணி நேரம் தாமதமாக வருவதால்., காரணம் என்ன? என்று கேட்டாள் நங்கை. அச்சிறுமி தினம் ஒரு காரணம் கூற..., நங்கைக்கு சந்தேகம் வந்தது.
அவர்கள் குடியிருப்பில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது நங்கையின் நினைவிற்கு வர.... இவளது விடுதியின் முன் நடந்த பதிவுகளை காண வேண்டும் என்று குடியிருப்பு கண்காணிப்பாளரை கேட்டாள். அவரும் இவள் கேட்ட பதிவுகளைத் தர, பார்த்த நங்கைக்கு அதிர்ச்சி... அச்சிறுமி, அவளது கார் ஓட்டுனருடன் சற்று எல்லைமீறி பழகுவது தெரிந்தது. அவனும், அச்சிறுமிக்கு புத்திமதி சொல்லாமல், அப்பிள்ளையின் இனக்கவர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருந்தான்.
நங்கை இதைப்பார்த்து வெலவெலத்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
உடனடியாக அவளது அம்மாவினை தொடர்பு கொண்டு, அச்சிறுமி பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில் வந்து பார்க்குமாறு கூறியிருந்தாள். அப்பெண்மணியும் வந்தார். மேற்படி விஷயங்களைக் கூற.... முதலில் அவ்வாறெல்லாம் தவறான காரியங்களை மகள் செய்யமாட்டாள் என்று அறுதியிட்டுக் கூறியவர், நங்கை கேமரா பதிவினை காண்பிக்க... அமைதியானார்.
மகளை கண்காணிப்பதாகவும், இயன்றால் வேறு ஊருக்கு மாறுதலாகி போவதாகவும் சொன்ன அந்த அன்னை, மனதார நன்றி கூறி விடைபெற்றார். ஆனால், இந்த விவரங்கள், அந்த ஓட்டுனருக்கு எப்படியோ தெரிந்து, நங்கையின் மீது வெறியானான். அவளை எவ்விதத்திலாவது பழி வாங்க நேரம் பார்த்துக் காத்திருந்தான். முன்னேற்பாடாக, அருகிலேயே ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, அங்கே வேன் ஓட்டுநராக பணி புரியும் அவனது நண்பனையும் குடியமர்த்தினான்
குழந்தைகளின் உலகம் மிக அழகானது, சுவாரசியமானது. அதில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது ஜாதி மத மாச்சரியங்கள் கிடையாது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேச அவர்களுக்கு நிச்சயமாய் தெரியாது. அவர்கள் தேசம் கடந்தவர்கள். உள்ளதை அப்படியே எடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை. பூக்கள் பூக்கும் நந்தவனத்தில். மல்லிகையை ரோஜா பழிக்குமா என்ன?., அந்நந்தவனத்தில் நங்கையின் அனுபவங்கள் அழகானவை... சுவாரஸ்யமானவை..., விவகாரமானவை...சில திகிலானவை.
ஒரு தமிழ் குழந்தை ஏழு வயதே நிரம்பிய பிள்ளை இவளது கிரீச்சில் சேர்ந்தது. பேச்சுவாக்கில், மங்கை தனக்குத் தமிழ் தெரியும் என்று சொல்லிவிட, "இவன் யு.கே.ஜி. வரைக்கும் தமிழ் படிச்சான். இப்போ இந்த ஒன்ற வருஷமா நான்தான் நேரம் கிடைக்கும்போது சொல்லித்தரேன். ஃப்ரீயா இருக்கும்போது கொஞ்சம் தமிழ் வேர்ட்ஸ் டிக்டேட் பண்ணுங்க ப்ளீஸ்", என்று குழந்தையின் அம்மா சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
அவ்வாறு ஒருநாள் அக்குழந்தையை தமிழ் வார்த்தைகளை எழுதச் சொல்லும் போது, நங்கை கூறிய வார்த்தை பாராட்டு. அப்பிள்ளை பா எழுதி, பிறகு ரா-வையும் யோசித்து எழுதியது, அதற்கு மேல் அவனுக்குத் தெரியவில்லை. எழுதுகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்த நங்கை, அவன் திருதிருவென முழிப்பதைப் பார்த்து, 'ட்' போட்டு 'டு' போடு என்றாள். பிறகு அ டு ஃ எழுது என்றாள்.
நந்தகுமார் என்ற அந்த சிறுவனும் சட்டென எழுதி முடித்து இருந்தான். "இவ்ளோ சீக்கிரம் எழுதிட்டானா?", யோசித்த நங்கை அவன் எழுதியதை சரிபார்க்க....., அப்பிள்ளையோ, "பாரா it 2" என்றும், "அ 2 ஃ" என்றும் எழுதியிருந்தான். அதை பார்த்த நங்கை முதலில் திகைத்தாலும்.... பின்னர் சிரிக்க ஆரம்பித்தாள். ட், டு என்று தமிழில் எழுதச் சொன்னால், அவன் ஆங்கிலத்தில் it-டையும், எண்களின் இரண்டையும் எழுதுவான் என்று கனவா கண்டாள்? அதையும்விட அ முதல் ஃ வரை எழுதச் சொன்னால்.... அ 2 ஃ என எழுதி, நங்கைக்கு "இப்பவே கண்ண கட்டுதே", என்ற உணர்வை கொடுத்தான் அந்தப் பிள்ளை.
ஒரு சீக்கிய பெண் பிள்ளை, பெயர் குர்ஷரன் கவுர், கிரீச்-ல் உள்ள ஒரு இஸ்லாமிய குழந்தையுடன் விளையாடுவதை வழக்கமாகிக் கொள்ள, அவள் அடிக்கடி சொல்லும் "இன்ஷா அல்லா", குர்ஷரனையும் தொற்றிக் கொள்ள... அது வீட்டில் பிரச்சனையை உருவாக்கி... விளைவு? மறுநாள் ..பெற்றோர், அவர்களது பெற்றோர் என அனைவரும் நேராய் நங்கையிடம் வந்து நின்றனர். அனைவரையும் அமர வைத்து என்ன விஷயம் என்று கேட்டாள்.
"நீங்க ஏன் முஸ்லிம் குழந்தைங்களோட எல்லாம் என் பிள்ளைய பழக விடுறீங்க, பாருங்க அவங்க பழக்கமும் இவளுக்கு வருது. வீட்ல முட்டி போட்டு தொழுகை பண்றா, இன்ஷா அல்லா-ன்னு எப்ப பாரு சொல்றா", என அவர்கள் புகாராய் சொல்லிக் கொண்டிருக்க.., நங்கையோ அப்பிள்ளையை பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றே வெளிறிய முகத்துடன், அன்னையின் கை பிடித்துக்கொண்டு அவரருகில், கொஞ்சம் பயத்துடன், புருவம் சுருக்கி உதடு பிதுக்கி அழுகத் தயாராக நின்றிருந்தாள், அச்சிறுமி.
நேரே அவள் அருகில் சென்று, "நீ ஷெரின் பண்ற மாதிரி வீட்ல நமாஸ் பண்ணினயாடா?", என்று கேட்க, அக்குழந்தை... அண்ணார்ந்து நங்கையைப் பார்த்து, "ம்ம்.." என்றது. அதற்குள்ளாகவே கண்களில் நீர் திரண்டு அழவே ஆரம்பித்தது.
"நோ பேபி அழக்கூடாது. இன்ஷா அல்லாவும் சொன்னீங்களா?", என்று முட்டி போட்டு அப் பிள்ளையின் உயரத்துக்கு குறைந்து, குழந்தையின் கைபிடித்து அவளருகே இழுத்து வைத்துக்கொண்டு கேட்க.., சற்று நம்பிக்கை வரப்பெற்ற அப்பிள்ளை இப்பொழுது அழுகையை நிறுத்தி இருந்தது. தேம்பிக் கொண்டே, "ம்ம்", என மண்டையை உருட்டியது.
"வெரி குட். அதோட அர்த்தம் என்னன்னு ஷெரின் சொன்னாளே, அத அம்மா கிட்ட சொல்லலையா?, சொல்லியிருந்தா உன்னை திட்டி இருக்கமாட்டாங்க., சொல்லுங்க அதோட அர்த்தம் என்ன?", என்று நங்கை கேட்டாள்.
"GOD இஷ்டப்படி", மிகச் சுருக்கமாய் அழகாய் கூறியது அக்குழந்தை. ஆம் அதன் அர்த்தம் அவ்வளவுதான்.. அப்பெண்ணிற்கும் (ஷெரின்) அவ்வாறே பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
"இப்போ சொல்லுங்க இன்ஷா அல்லா சொல்றதுல என்ன தப்பு இருக்கு?", என்று வந்திருந்த பெரியவர்களைப் பார்த்து கேட்டாள்.
பதிலளிக்க வார்த்தை ஏது?
"இவங்க சின்ன குழந்தைங்க, அவங்களுக்குள்ள இப்பவே மதத்தைப் புகுத்தி பிரிச்சு விட்டுடாதீங்க ப்ளீஸ், அல்லாஹ்-ன்னா உங்க பொண்ணுக்கு உங்க குருமார்கள் தான் ஞாபகம் வருவாங்க, நமாஸுக்கும், நம்ம பண்ற நமஸ்காரத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. விளக்கம் போதும்ன்னு நினைக்கிறேன்", பெரிய விளக்கம் கூறி முடித்தாள் நங்கை நல்லாள்.
இன்னொரு குழந்தையின் விஷயம்... சற்று விவகாரமானது. பத்து வயது நிரம்பிய பெண் பிள்ளை, சற்றே போஷாக்கான பிள்ளையும் கூட. , வளர்ச்சியும் சற்று அதிகமே. பள்ளி முடிந்து மூன்று மணிக்கெல்லாம் வரவேண்டிய குழந்தை, சில நாட்களாய் தொடர்ந்து அரை மணி நேரம் தாமதமாக வருவதால்., காரணம் என்ன? என்று கேட்டாள் நங்கை. அச்சிறுமி தினம் ஒரு காரணம் கூற..., நங்கைக்கு சந்தேகம் வந்தது.
அவர்கள் குடியிருப்பில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது நங்கையின் நினைவிற்கு வர.... இவளது விடுதியின் முன் நடந்த பதிவுகளை காண வேண்டும் என்று குடியிருப்பு கண்காணிப்பாளரை கேட்டாள். அவரும் இவள் கேட்ட பதிவுகளைத் தர, பார்த்த நங்கைக்கு அதிர்ச்சி... அச்சிறுமி, அவளது கார் ஓட்டுனருடன் சற்று எல்லைமீறி பழகுவது தெரிந்தது. அவனும், அச்சிறுமிக்கு புத்திமதி சொல்லாமல், அப்பிள்ளையின் இனக்கவர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருந்தான்.
நங்கை இதைப்பார்த்து வெலவெலத்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
உடனடியாக அவளது அம்மாவினை தொடர்பு கொண்டு, அச்சிறுமி பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில் வந்து பார்க்குமாறு கூறியிருந்தாள். அப்பெண்மணியும் வந்தார். மேற்படி விஷயங்களைக் கூற.... முதலில் அவ்வாறெல்லாம் தவறான காரியங்களை மகள் செய்யமாட்டாள் என்று அறுதியிட்டுக் கூறியவர், நங்கை கேமரா பதிவினை காண்பிக்க... அமைதியானார்.
மகளை கண்காணிப்பதாகவும், இயன்றால் வேறு ஊருக்கு மாறுதலாகி போவதாகவும் சொன்ன அந்த அன்னை, மனதார நன்றி கூறி விடைபெற்றார். ஆனால், இந்த விவரங்கள், அந்த ஓட்டுனருக்கு எப்படியோ தெரிந்து, நங்கையின் மீது வெறியானான். அவளை எவ்விதத்திலாவது பழி வாங்க நேரம் பார்த்துக் காத்திருந்தான். முன்னேற்பாடாக, அருகிலேயே ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, அங்கே வேன் ஓட்டுநராக பணி புரியும் அவனது நண்பனையும் குடியமர்த்தினான்