ஹாய்... ஹலோ... மக்களே..!!
சாரிப்பா ரொம்ப லேட் ஆகிட்டு... என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! எபி 15 கொண்டு வந்துட்டேன்.. படிங்க.. படிச்சு லைக், கமெண்ட்ஸ் பண்ணுங்க... இதுவரை படித்து கமெண்ட்ஸ் சொல்லுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மக்களே.. லவ் யூ ஆல்..... நாளைக்கு அடுத்த எபியுடன் வருகிறேன்.... சைட்க்கு வந்தே ரொம்ப நாள் ஆனமாதிரி பீல் ஆகுது... லக்ஷ்மியின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று இந்த கட்டத்தை பார்த்து கெஸ் பண்ணுங்க.... சரியா சொல்லுறவங்களுக்கு..? என்ன தரலாம் அதையும் நீங்களே சொல்லுங்க.... அதுக்குள்ள நான் அடுத்த எபி ரெடி பண்ணுறேன் டாட்டா... பிக் வரும் எபியில் போடுறேன்...
வேர் – 15
“ ஒ.. ஒண்ணும் இல்ல “ எனதடுமாற்றத்துடன் கூடிய வெட்கத்துடன் இனியாள் கூற..
அப்பொழுது தான் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த லக்ஷ்மி இனியாள் போனில் பேசுவதைக் கண்டு “ யார்கிட்ட இவா இப்படி பேசிகிட்டு இருக்கா..? “ என யோசித்து அவள் கையில் இருந்த ரிசீவரை வாங்கிய லக்ஷ்மி காதில் வைக்க...
“ சரி மேல வா பொண்டாட்டி..!!” என வெற்றி குறும்பாக கூறவும்..
வெகுண்டெழுந்த லக்ஷ்மி அடுத்த நிமிடம் இடிஎன இனியாள் கன்னத்தில் தன் கரத்தை இறக்கினார்...
“ பளார்“ என்ற குரல் கேட்டு தன் அறையை விட்டு வெளியில் பதறியடித்து வெற்றி வெளியில் வர..
ரிசீவரைகையில் வைத்திருந்த லக்ஷ்மி ருத்ரமூர்த்தியாக இனியாளை முறைத்து நின்றார்...
“ அத்தை அது “ என தடுமாற்றத்துடன் கூற..
“ யாரு.. யாருக்குடி அத்தை... இதுக்கு தான் தலைப்பாட அடிச்சுகிட்டேன் இப்படி அனாதைகளை எல்லாம்நடு வீட்டுல கொண்டு வைக்காதீங்கனு யாராவது கேட்டாங்களா..? ”
என்னமோ உலகத்தில இல்லாத மாதிரி உங்களை வீட்டுல கொண்டு வச்சாங்க இப்போ பாரு தாராதரம் இல்லாதவ எல்லாம் நடுவீட்டுல வந்து குடுமபத்துல ஒருத்தியாக வந்து நிற்குற நிலையில் இருக்கு “ என கூறி மீண்டும் அவளை அடிக்க வர..
“ ம்மா... எதுக்கும்மா இப்படி பண்ணுற... நான் அவளை தான் கல்யாணம் பண்ணுவேன்.. நீங்க இப்படி பண்ணுறது எனக்கு பிடிக்கலை “ எனஅவரை தடுக்க வெற்றி வர..
அதிர்ந்த லக்ஷ்மி “ டேய் வெற்றி... பெத்த அம்மாவை விட அவ உனக்கு முக்கியமா போயிட்டாளா.. அப்படி என்னடா செய்து உன்னை இந்த கழுதை மயக்குனா ..? “ என அவளை ஒரு மாதிரியாக பார்த்து முகத்தை சுழித்து...
“ இதுக்கு தான் கண்ட கண்ட கழுதைகளையும் வீட்டுக்குள்ள சேர்க்க வேண்டாம்ன்னு சொன்னேன்... வேலைகாரர்களுக்குஎன்று ஒரு தரம், தகுதிஇருக்கு.., அது.. அது.. இடத்துல இருக்கணும்... அது தான் எல்லாருக்கும் நல்லது...
வேலைகாரர்களுக்கு இடம் கொடுத்தா.. நடு வீட்டுலயே குடியும், குடித்தனமுமாஇருக்க ஆரம்பிச்சுருவாங்க... இந்த நாய்களை மாதிரி... இவளுக்குஎன் பையன் கேட்குதோ... இனி ஒரு நிமிஷம் கூட வீட்டுல இருக்க கூடாது வெளிய போடி “ என கூறி அவளை இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல...
இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த கங்கா, அவுட்ஹவுஸ் நோக்கி செல்ல “ இதழி வீட்டுல பெரும் சண்டை நடக்குது... உன் அக்காவை பெரியம்மா அடிச்சுட்டாங்க..?“ என பதட்டத்துடன் கூற...
பதறிய இதழி வீட்டை விட்டு வெளியில் வர, “ இதழி நானும் வாரேன் “ என கூறி மணியம்மாளும்அவள் கூடவே சென்றார்..
“ ம்ம்மா... நீங்க பேசுறது எதுவும் சரி இல்லை... அவ ஒன்னும் என்னை மயக்கல... நான் தான் அவளை மயக்குனேன்.. அவளை சொல்லுறது எல்லாம் என்னை சொல்லுற மாதிரி... முதல்ல மனுசங்களுக்கு மரியாதை கொடுத்து பழகுங்க...
இவ்வளவு வயசாகுதே கொஞ்சமாவது திருந்துங்கம்மா... கொஞ்சமாவது அந்த துருபுடிச்ச அறிவை யூஸ் பண்ணுங்க... அவா உங்களை என்ன பண்ணுனா.? அவளுக்கு என்னதகுதி இல்லை.. உங்களை விட, எல்லா தகுதியும் இருக்கு.. நீங்களே இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வரும் போது, இவா வரதுக்கு என்ன.. இவளை தான்நான் கட்டுவேன்.. இவ தான் இந்த வீட்டு மருமகள் உங்களால என்ன முடியுமோ அதை பண்ணுங்க.. இப்போஇனியை விடுங்க “ என அவர் கையில் இருந்து இனியாளை மீட்க
இத்தனை நேரம் வெற்றி பேசிய பேச்சில் அதிர்ந்து நின்ற அவர் “ என் மகனை எதிரா திருப்பிவிட்டுலல..?? “ எனஆக்ரோசமாக கேட்டு அவளை வாசல் பக்கமாக தள்ளி விட...
வெளியில்அப்பொழுது தான் அவுட்ஹௌசில் இருந்து வந்த மணியம்மாள் மேலே இனியாள் தடுமாறி விழ.. அதை எதிர் பார்க்காத மணியம்மாளும் அவள் கூடவே விழுந்தார்......
அருகில் கிடந்த கல்லில் மணியம்மாளின் தலை பயங்கரமாக மோத வழியும் ரத்தத்துடன் அப்படியே விழ..,
“ பாட்டிஈஈ“ என அலறிய இதழி அவரை நோக்கி ஓடி வர..
“ இனி“ என்றபடி வெற்றியும் ஓடி வர..,
லக்ஷ்மிஅவர்களைஅப்படியே அசையாமல் பார்த்திருந்தார்..
மணியம்மாளை மடியில் ஏந்திய இதழி “ பாட்டி.. பாட்டி.. எழுந்திரு பாட்டி... “ என அவரின் கன்னத்தை தட்டி கதற..
மெதுவாக கண்ணை திறந்த மணியமாள்அவளைப் பார்க்க...அந்த நேரம் வெளியில் சென்ற கண்ணழகி வர..,
இவர்கள் நிலையை கண்டு “ என்ன ஆச்சு.. யாருக்கு என்ன ஆச்சு “ என பதறிஅருகில் வர..
அவரை நோக்கி பார்வையை திரும்பிய மணி“ ஒரே ஒரு பார்வை “ மட்டும் பார்த்து அப்படியேமயங்கினார்...
அந்த பார்வை “ உன்னை நம்பி தானே நான் வந்தேன்.. இப்பொழுது பார் இவர்களின் நிலையை “ என கேட்பதாக இருக்க..
ஒரு நிமிடம் அதிர்ந்த கண்ணழகி “ டேய்.. வெற்றி காரை எடுடா“ என கூறி வேலைகாரர்களை வைத்து மணியம்மாளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்ல அதற்கு முன் தன் மூச்சை நிறுத்தி இருந்தார் மணியம்மாள்...
அப்படியே அமர்ந்துவிட்டார் கண்ணழகிஅவர் கண் முன் மணியம்மாள் பார்த்த பார்வையே நின்றது...
அடுத்த சில மணி நேரத்தில் நாராயணன், சக்தி இருவரும் கிளம்பிவீட்டை நோக்கி வர.., இனியாள், இதழி இருவருக்கும் வாழ்கையை அழிந்த உணர்வு..
மணியம்மாள் இருக்கும் வரை, “ எந்தகவலையும் இல்லாமல் இருந்தனர்... எல்லாரையும் விட நன்கு பார்த்துக் கொண்டார்... லக்ஷ்மியின் குற்றசாட்டில் இருந்து காக்கும் தெய்வம் அவர்... அரண்மனையில் வேலை செய்கிறார்.. எங்களுக்கென்று ஒரு வேலை, ஒரு உறவு, ஒரு குடும்பம் என்று இருந்தது ஆனால் இப்பொழுதோ ஏதும் இல்லாத லக்ஷ்மி கூறியதுப் போல அனாதையாகி விட்டோம் “ இனிஎங்கு செல்வது.. எங்களை யார் பார்த்துக் கொள்வது “ என யோசிக்க
“ யம்மாடி“ என ஓடி வந்த நாராயணன் அவர்களை அணைத்துக் கொண்டார்...மணியம்மாளின் இறப்பு யாருமே எதிர் பார்க்காத நிகழ்வு... சக்தி ஓரமாக நின்று இதழியை தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்... இனியாள் சொல்லவே வேண்டாம் “ தன் தகுதியை அறிந்தும், அளவுக்கு அதிகமாக ஆசைபட்டு எல்லாம் எல்லாம் அழிந்து விட்டது “என அப்படியே கலங்கி நின்றிருந்தாள்....
அடுத்த இரண்டு நாளில் மணியம்மாளின் காரியம் முடிந்து நிலைமை கொஞ்சம் மாற...
நடந்ததை அப்பொழுது தான் கேட்டு அறிந்தார் கண்ணழகி... லக்ஷ்மியை ஒரு பார்வை பார்த்த அவர் நேராக இனி, இதழியை நோக்கி சென்றார்...
நாராயணனோ ஒரு படி மேல் போய் தன் மனைவியை அறைந்திருந்தார். “ அப்பா.. என்ன பண்ணுறீங்க “ என தடுக்க வந்த சக்தியை தன் பார்வையால் தடுத்து நிறுத்திய அவர் தானும் அவுட்ஹவுஸ் சென்றார்..
சக்தி செய்வதறியாமல் அப்படியே நின்றிருந்தான்... “ அவன் எண்ணியது என்ன நடப்பது என்ன..? யார் மேல் தவறு என்று அவனுக்கே தெரியவில்லை.. ஆனால் ஒரு உயிர் போய் விட்டதை அவனால் தாங்க முடியவில்லை... லக்ஷ்மியை பார்த்து முறைத்து விட்டு தன் அறைக்கு சென்றான்..
எல்லாரும் அவரை ஒதுக்குவதை கண்ட லக்ஷ்மிக்கு மீண்டும் அந்த இருவர் மேலும் கோபம் வளர்ந்தது “ இவங்க ரெண்டு பேரும் தான் எல்லாத்துக்கும்காரணம் “ என மீண்டும் இருவர் மேலும் வன்மம் வளர்த்தார் மனதில் “ உங்களை வீட்டை விட்டு விரட்டாமல் இருக்க மாட்டேன் “ என சூளுரைத்துக் கொண்டார்...
அந்த நேரம் கூட யாருக்கும் இருவரும் இந்த வீட்டின் வாரிசு தான் என கூற மனம் வரவில்லை... அப்படி கூறி இருந்தால் ஒருவேளை லக்ஷ்மி மனம் மாறி இருப்பாரோ.? கண்டிப்பாக மாட்டார்..?
வெற்றி தன் அறையை விட்டு வெளியில் வரவே இல்ல... அவனுக்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை... “ எல்லாம் தன்னால் தான் “ என கலங்கி இருந்தான்..
இனியாள் – இதழினி இருவரும் “ தங்களால் வீட்டில் இனி பிரச்சனை வேண்டாம்“ என எண்ணி அடுத்த ஒரு வாரத்தில் வீட்டை விட்டு கிளம்ப அவர்கள் கூடவே கண்ணழகியும் கிளம்ப..
“ பாட்டி நீங்க எங்க வாறீங்க.. எங்களால இனியும் பிரச்சனை வேண்டாம்.. நாங்க ஏதாவது ஹாஸ்டலில் தங்கி எங்க வாழ்கையை பார்க்கிறோம் “ என கூற..
“ என் வாரிசுகள்... வீட்டை விட்டு வெளியில் போனால், நாங்க இங்க இருந்து என்னத்துக்கு “ என நாராயணன் கேட்க..
அதிர்ந்து விழித்த இருவரும் “ மாமா.. சத்தமா பேசாதீங்க.. இது கூட அத்தை காதுக்கு கேட்டா வீணா பிரச்சனை தான் வரும் “ எனஅவர் கூறுவதை சரியாக கவனிக்காமல் கூற...
“ அவளை விடும்மா.. நீங்க இந்த வீடு வாரிசு தான்... என்னோட பொண்ணு பசங்க தான் நீங்க... மணி தான் இந்த உண்மை யாருக்கும் தெரியவேண்டாம்... நீங்க வீட்டுல வேலைகாரர்கள் பேத்தியாவே வளரட்டும்னு சொன்னா அதனால் தான் நான் கூறவில்லை “ என கூறி கண்ணழகி அணைத்துக் கொள்ள..
அப்படியேஅதிர்ச்சியாகஇருவரும் அவர்களை பார்த்துநிற்க“ என்னம்மா யோசிக்குறீங்க “ என கேட்க..
“ வேண்டாம் பாட்டி நாங்க எங்கையாவது போறோம்.. இப்போ நாங்க வீட்டின் வாரிசுன்னு அங்க வந்தா அத்தை சும்மா இருக்கமாட்டாங்க... மாமாவை மயக்க வந்திருகோம்னு சொல்லி அசிங்க படுத்துவாங்க “ என கூறி இனியாள் அழ..
இருவராலும் கண்கொண்டு அவர்களை பார்க்க முடியவில்லை.... “ நீங்க வாங்க “ என கூறிய கண்ணழகி இருவரையும் இரு கையில் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தார்..
இனியாளோ தயங்கி வெளியில் நிற்க “ வாங்க“ என அதட்டி வீட்டில் அழைக்க..
“ அவங்க வீட்டில் வந்தால் நான் இங்கு இருக்க மாட்டேன் “ என மீண்டும் லக்ஷ்மி போர் கொடி தூக்க..
அவரை ஒரு பார்வை பார்த்த கண்ணழகி வீட்டின் உள் அழைத்து சென்று தன் அறைக்கு அருகில் உள்ள அறையில் தங்க வைத்தார்...
அவரைமுறைத்த லக்ஷ்மி ஏதும் கூறாமல் தன் அறைக்கு சென்றார்..மனதிலோ“ எப்படியும் இங்க தான இருக்க போறீங்க.. அப்போ கவனிச்சுகிறேன் உங்களை...... ஒரு வேலைக்காரிக்கு இருக்கும் மரியாதை கூட இந்த வீட்டு மருமகளுக்கு இல்லை “ என அவர் மனது சாடிக் கொண்டு இருந்தது.....
அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் சக்தி மும்பை விட்ட வேலையை தொடர செல்ல.. வெற்றியோ கொஞ்சம் கொஞ்சமாக அவன் கூட்டில் இருந்து வெளியில் வந்தான்.. ஆனாலும் இனியாளை காணும் நேரம் மனதில் குற்றஉணர்ச்சி வந்துப் போக... அவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்லும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டான்...
இதழி எத்தனையோ மறுத்து கூற... போன் போட்டு சக்திக்கு அழைக்க “ இந்தகுட்டிமாமாவுக்காக நீ போ “ என்பதை தவிர அவன் ஏதும் பேசாமல் அழைப்பை நிறுத்த மறுபேச்சில்லாமல் அவன் கூடவே கிளம்பி சென்றனர்...
இதை எல்லாம் லக்ஷ்மி ஒரு முறைப்புடனே பார்த்துக் கொண்டு இருந்தார்.. ஆனாலும் சமயம் கிடைக்கும் நேரம் எல்லாம் அவர்களை வேலைகாரர்களாக நடத்த தவறவும் இல்லை...
சாரிப்பா ரொம்ப லேட் ஆகிட்டு... என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! எபி 15 கொண்டு வந்துட்டேன்.. படிங்க.. படிச்சு லைக், கமெண்ட்ஸ் பண்ணுங்க... இதுவரை படித்து கமெண்ட்ஸ் சொல்லுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மக்களே.. லவ் யூ ஆல்..... நாளைக்கு அடுத்த எபியுடன் வருகிறேன்.... சைட்க்கு வந்தே ரொம்ப நாள் ஆனமாதிரி பீல் ஆகுது... லக்ஷ்மியின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று இந்த கட்டத்தை பார்த்து கெஸ் பண்ணுங்க.... சரியா சொல்லுறவங்களுக்கு..? என்ன தரலாம் அதையும் நீங்களே சொல்லுங்க.... அதுக்குள்ள நான் அடுத்த எபி ரெடி பண்ணுறேன் டாட்டா... பிக் வரும் எபியில் போடுறேன்...
வேர் – 15
“ ஒ.. ஒண்ணும் இல்ல “ எனதடுமாற்றத்துடன் கூடிய வெட்கத்துடன் இனியாள் கூற..
அப்பொழுது தான் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த லக்ஷ்மி இனியாள் போனில் பேசுவதைக் கண்டு “ யார்கிட்ட இவா இப்படி பேசிகிட்டு இருக்கா..? “ என யோசித்து அவள் கையில் இருந்த ரிசீவரை வாங்கிய லக்ஷ்மி காதில் வைக்க...
“ சரி மேல வா பொண்டாட்டி..!!” என வெற்றி குறும்பாக கூறவும்..
வெகுண்டெழுந்த லக்ஷ்மி அடுத்த நிமிடம் இடிஎன இனியாள் கன்னத்தில் தன் கரத்தை இறக்கினார்...
“ பளார்“ என்ற குரல் கேட்டு தன் அறையை விட்டு வெளியில் பதறியடித்து வெற்றி வெளியில் வர..
ரிசீவரைகையில் வைத்திருந்த லக்ஷ்மி ருத்ரமூர்த்தியாக இனியாளை முறைத்து நின்றார்...
“ அத்தை அது “ என தடுமாற்றத்துடன் கூற..
“ யாரு.. யாருக்குடி அத்தை... இதுக்கு தான் தலைப்பாட அடிச்சுகிட்டேன் இப்படி அனாதைகளை எல்லாம்நடு வீட்டுல கொண்டு வைக்காதீங்கனு யாராவது கேட்டாங்களா..? ”
என்னமோ உலகத்தில இல்லாத மாதிரி உங்களை வீட்டுல கொண்டு வச்சாங்க இப்போ பாரு தாராதரம் இல்லாதவ எல்லாம் நடுவீட்டுல வந்து குடுமபத்துல ஒருத்தியாக வந்து நிற்குற நிலையில் இருக்கு “ என கூறி மீண்டும் அவளை அடிக்க வர..
“ ம்மா... எதுக்கும்மா இப்படி பண்ணுற... நான் அவளை தான் கல்யாணம் பண்ணுவேன்.. நீங்க இப்படி பண்ணுறது எனக்கு பிடிக்கலை “ எனஅவரை தடுக்க வெற்றி வர..
அதிர்ந்த லக்ஷ்மி “ டேய் வெற்றி... பெத்த அம்மாவை விட அவ உனக்கு முக்கியமா போயிட்டாளா.. அப்படி என்னடா செய்து உன்னை இந்த கழுதை மயக்குனா ..? “ என அவளை ஒரு மாதிரியாக பார்த்து முகத்தை சுழித்து...
“ இதுக்கு தான் கண்ட கண்ட கழுதைகளையும் வீட்டுக்குள்ள சேர்க்க வேண்டாம்ன்னு சொன்னேன்... வேலைகாரர்களுக்குஎன்று ஒரு தரம், தகுதிஇருக்கு.., அது.. அது.. இடத்துல இருக்கணும்... அது தான் எல்லாருக்கும் நல்லது...
வேலைகாரர்களுக்கு இடம் கொடுத்தா.. நடு வீட்டுலயே குடியும், குடித்தனமுமாஇருக்க ஆரம்பிச்சுருவாங்க... இந்த நாய்களை மாதிரி... இவளுக்குஎன் பையன் கேட்குதோ... இனி ஒரு நிமிஷம் கூட வீட்டுல இருக்க கூடாது வெளிய போடி “ என கூறி அவளை இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல...
இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த கங்கா, அவுட்ஹவுஸ் நோக்கி செல்ல “ இதழி வீட்டுல பெரும் சண்டை நடக்குது... உன் அக்காவை பெரியம்மா அடிச்சுட்டாங்க..?“ என பதட்டத்துடன் கூற...
பதறிய இதழி வீட்டை விட்டு வெளியில் வர, “ இதழி நானும் வாரேன் “ என கூறி மணியம்மாளும்அவள் கூடவே சென்றார்..
“ ம்ம்மா... நீங்க பேசுறது எதுவும் சரி இல்லை... அவ ஒன்னும் என்னை மயக்கல... நான் தான் அவளை மயக்குனேன்.. அவளை சொல்லுறது எல்லாம் என்னை சொல்லுற மாதிரி... முதல்ல மனுசங்களுக்கு மரியாதை கொடுத்து பழகுங்க...
இவ்வளவு வயசாகுதே கொஞ்சமாவது திருந்துங்கம்மா... கொஞ்சமாவது அந்த துருபுடிச்ச அறிவை யூஸ் பண்ணுங்க... அவா உங்களை என்ன பண்ணுனா.? அவளுக்கு என்னதகுதி இல்லை.. உங்களை விட, எல்லா தகுதியும் இருக்கு.. நீங்களே இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வரும் போது, இவா வரதுக்கு என்ன.. இவளை தான்நான் கட்டுவேன்.. இவ தான் இந்த வீட்டு மருமகள் உங்களால என்ன முடியுமோ அதை பண்ணுங்க.. இப்போஇனியை விடுங்க “ என அவர் கையில் இருந்து இனியாளை மீட்க
இத்தனை நேரம் வெற்றி பேசிய பேச்சில் அதிர்ந்து நின்ற அவர் “ என் மகனை எதிரா திருப்பிவிட்டுலல..?? “ எனஆக்ரோசமாக கேட்டு அவளை வாசல் பக்கமாக தள்ளி விட...
வெளியில்அப்பொழுது தான் அவுட்ஹௌசில் இருந்து வந்த மணியம்மாள் மேலே இனியாள் தடுமாறி விழ.. அதை எதிர் பார்க்காத மணியம்மாளும் அவள் கூடவே விழுந்தார்......
அருகில் கிடந்த கல்லில் மணியம்மாளின் தலை பயங்கரமாக மோத வழியும் ரத்தத்துடன் அப்படியே விழ..,
“ பாட்டிஈஈ“ என அலறிய இதழி அவரை நோக்கி ஓடி வர..
“ இனி“ என்றபடி வெற்றியும் ஓடி வர..,
லக்ஷ்மிஅவர்களைஅப்படியே அசையாமல் பார்த்திருந்தார்..
மணியம்மாளை மடியில் ஏந்திய இதழி “ பாட்டி.. பாட்டி.. எழுந்திரு பாட்டி... “ என அவரின் கன்னத்தை தட்டி கதற..
மெதுவாக கண்ணை திறந்த மணியமாள்அவளைப் பார்க்க...அந்த நேரம் வெளியில் சென்ற கண்ணழகி வர..,
இவர்கள் நிலையை கண்டு “ என்ன ஆச்சு.. யாருக்கு என்ன ஆச்சு “ என பதறிஅருகில் வர..
அவரை நோக்கி பார்வையை திரும்பிய மணி“ ஒரே ஒரு பார்வை “ மட்டும் பார்த்து அப்படியேமயங்கினார்...
அந்த பார்வை “ உன்னை நம்பி தானே நான் வந்தேன்.. இப்பொழுது பார் இவர்களின் நிலையை “ என கேட்பதாக இருக்க..
ஒரு நிமிடம் அதிர்ந்த கண்ணழகி “ டேய்.. வெற்றி காரை எடுடா“ என கூறி வேலைகாரர்களை வைத்து மணியம்மாளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்ல அதற்கு முன் தன் மூச்சை நிறுத்தி இருந்தார் மணியம்மாள்...
அப்படியே அமர்ந்துவிட்டார் கண்ணழகிஅவர் கண் முன் மணியம்மாள் பார்த்த பார்வையே நின்றது...
அடுத்த சில மணி நேரத்தில் நாராயணன், சக்தி இருவரும் கிளம்பிவீட்டை நோக்கி வர.., இனியாள், இதழி இருவருக்கும் வாழ்கையை அழிந்த உணர்வு..
மணியம்மாள் இருக்கும் வரை, “ எந்தகவலையும் இல்லாமல் இருந்தனர்... எல்லாரையும் விட நன்கு பார்த்துக் கொண்டார்... லக்ஷ்மியின் குற்றசாட்டில் இருந்து காக்கும் தெய்வம் அவர்... அரண்மனையில் வேலை செய்கிறார்.. எங்களுக்கென்று ஒரு வேலை, ஒரு உறவு, ஒரு குடும்பம் என்று இருந்தது ஆனால் இப்பொழுதோ ஏதும் இல்லாத லக்ஷ்மி கூறியதுப் போல அனாதையாகி விட்டோம் “ இனிஎங்கு செல்வது.. எங்களை யார் பார்த்துக் கொள்வது “ என யோசிக்க
“ யம்மாடி“ என ஓடி வந்த நாராயணன் அவர்களை அணைத்துக் கொண்டார்...மணியம்மாளின் இறப்பு யாருமே எதிர் பார்க்காத நிகழ்வு... சக்தி ஓரமாக நின்று இதழியை தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்... இனியாள் சொல்லவே வேண்டாம் “ தன் தகுதியை அறிந்தும், அளவுக்கு அதிகமாக ஆசைபட்டு எல்லாம் எல்லாம் அழிந்து விட்டது “என அப்படியே கலங்கி நின்றிருந்தாள்....
அடுத்த இரண்டு நாளில் மணியம்மாளின் காரியம் முடிந்து நிலைமை கொஞ்சம் மாற...
நடந்ததை அப்பொழுது தான் கேட்டு அறிந்தார் கண்ணழகி... லக்ஷ்மியை ஒரு பார்வை பார்த்த அவர் நேராக இனி, இதழியை நோக்கி சென்றார்...
நாராயணனோ ஒரு படி மேல் போய் தன் மனைவியை அறைந்திருந்தார். “ அப்பா.. என்ன பண்ணுறீங்க “ என தடுக்க வந்த சக்தியை தன் பார்வையால் தடுத்து நிறுத்திய அவர் தானும் அவுட்ஹவுஸ் சென்றார்..
சக்தி செய்வதறியாமல் அப்படியே நின்றிருந்தான்... “ அவன் எண்ணியது என்ன நடப்பது என்ன..? யார் மேல் தவறு என்று அவனுக்கே தெரியவில்லை.. ஆனால் ஒரு உயிர் போய் விட்டதை அவனால் தாங்க முடியவில்லை... லக்ஷ்மியை பார்த்து முறைத்து விட்டு தன் அறைக்கு சென்றான்..
எல்லாரும் அவரை ஒதுக்குவதை கண்ட லக்ஷ்மிக்கு மீண்டும் அந்த இருவர் மேலும் கோபம் வளர்ந்தது “ இவங்க ரெண்டு பேரும் தான் எல்லாத்துக்கும்காரணம் “ என மீண்டும் இருவர் மேலும் வன்மம் வளர்த்தார் மனதில் “ உங்களை வீட்டை விட்டு விரட்டாமல் இருக்க மாட்டேன் “ என சூளுரைத்துக் கொண்டார்...
அந்த நேரம் கூட யாருக்கும் இருவரும் இந்த வீட்டின் வாரிசு தான் என கூற மனம் வரவில்லை... அப்படி கூறி இருந்தால் ஒருவேளை லக்ஷ்மி மனம் மாறி இருப்பாரோ.? கண்டிப்பாக மாட்டார்..?
வெற்றி தன் அறையை விட்டு வெளியில் வரவே இல்ல... அவனுக்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை... “ எல்லாம் தன்னால் தான் “ என கலங்கி இருந்தான்..
இனியாள் – இதழினி இருவரும் “ தங்களால் வீட்டில் இனி பிரச்சனை வேண்டாம்“ என எண்ணி அடுத்த ஒரு வாரத்தில் வீட்டை விட்டு கிளம்ப அவர்கள் கூடவே கண்ணழகியும் கிளம்ப..
“ பாட்டி நீங்க எங்க வாறீங்க.. எங்களால இனியும் பிரச்சனை வேண்டாம்.. நாங்க ஏதாவது ஹாஸ்டலில் தங்கி எங்க வாழ்கையை பார்க்கிறோம் “ என கூற..
“ என் வாரிசுகள்... வீட்டை விட்டு வெளியில் போனால், நாங்க இங்க இருந்து என்னத்துக்கு “ என நாராயணன் கேட்க..
அதிர்ந்து விழித்த இருவரும் “ மாமா.. சத்தமா பேசாதீங்க.. இது கூட அத்தை காதுக்கு கேட்டா வீணா பிரச்சனை தான் வரும் “ எனஅவர் கூறுவதை சரியாக கவனிக்காமல் கூற...
“ அவளை விடும்மா.. நீங்க இந்த வீடு வாரிசு தான்... என்னோட பொண்ணு பசங்க தான் நீங்க... மணி தான் இந்த உண்மை யாருக்கும் தெரியவேண்டாம்... நீங்க வீட்டுல வேலைகாரர்கள் பேத்தியாவே வளரட்டும்னு சொன்னா அதனால் தான் நான் கூறவில்லை “ என கூறி கண்ணழகி அணைத்துக் கொள்ள..
அப்படியேஅதிர்ச்சியாகஇருவரும் அவர்களை பார்த்துநிற்க“ என்னம்மா யோசிக்குறீங்க “ என கேட்க..
“ வேண்டாம் பாட்டி நாங்க எங்கையாவது போறோம்.. இப்போ நாங்க வீட்டின் வாரிசுன்னு அங்க வந்தா அத்தை சும்மா இருக்கமாட்டாங்க... மாமாவை மயக்க வந்திருகோம்னு சொல்லி அசிங்க படுத்துவாங்க “ என கூறி இனியாள் அழ..
இருவராலும் கண்கொண்டு அவர்களை பார்க்க முடியவில்லை.... “ நீங்க வாங்க “ என கூறிய கண்ணழகி இருவரையும் இரு கையில் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தார்..
இனியாளோ தயங்கி வெளியில் நிற்க “ வாங்க“ என அதட்டி வீட்டில் அழைக்க..
“ அவங்க வீட்டில் வந்தால் நான் இங்கு இருக்க மாட்டேன் “ என மீண்டும் லக்ஷ்மி போர் கொடி தூக்க..
அவரை ஒரு பார்வை பார்த்த கண்ணழகி வீட்டின் உள் அழைத்து சென்று தன் அறைக்கு அருகில் உள்ள அறையில் தங்க வைத்தார்...
அவரைமுறைத்த லக்ஷ்மி ஏதும் கூறாமல் தன் அறைக்கு சென்றார்..மனதிலோ“ எப்படியும் இங்க தான இருக்க போறீங்க.. அப்போ கவனிச்சுகிறேன் உங்களை...... ஒரு வேலைக்காரிக்கு இருக்கும் மரியாதை கூட இந்த வீட்டு மருமகளுக்கு இல்லை “ என அவர் மனது சாடிக் கொண்டு இருந்தது.....
அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் சக்தி மும்பை விட்ட வேலையை தொடர செல்ல.. வெற்றியோ கொஞ்சம் கொஞ்சமாக அவன் கூட்டில் இருந்து வெளியில் வந்தான்.. ஆனாலும் இனியாளை காணும் நேரம் மனதில் குற்றஉணர்ச்சி வந்துப் போக... அவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்லும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டான்...
இதழி எத்தனையோ மறுத்து கூற... போன் போட்டு சக்திக்கு அழைக்க “ இந்தகுட்டிமாமாவுக்காக நீ போ “ என்பதை தவிர அவன் ஏதும் பேசாமல் அழைப்பை நிறுத்த மறுபேச்சில்லாமல் அவன் கூடவே கிளம்பி சென்றனர்...
இதை எல்லாம் லக்ஷ்மி ஒரு முறைப்புடனே பார்த்துக் கொண்டு இருந்தார்.. ஆனாலும் சமயம் கிடைக்கும் நேரம் எல்லாம் அவர்களை வேலைகாரர்களாக நடத்த தவறவும் இல்லை...
Last edited: