- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 3
காலை வேளை அந்த மருத்துவமனையில், பெரும் பரபரப்பு ஓடிக் கொண்டு இருந்தது. அந்த பரபரப்புக்கு காரணம், வருண் அங்கே வந்தது தான்.
அவன் மட்டுமாக வரவில்லை, அவனின் செக்யூரிட்டிகள் படை சூழ வந்து இறங்கி இருந்தான். வரவேற்ப்பில், டாக்டர் ப்ரீத்தியை பார்க்க வேண்டும் என்று கூறி அங்கே போடப்பட்டு இருந்த நாற்காலியில், கம்பீரமாக அமர்ந்து இருந்தான்.
அங்கு வேலை செய்து கொண்டு இருந்த செவிலியர்கள், குளிர் கண்ணாடி அணிந்து கம்பீரமாக அமர்ந்து இருந்த அவனை பார்த்து ஜொள்ளிக் கொண்டு இருந்தனர்.
தன் மற்ற வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, அங்கே வரவேற்பறை வந்த ப்ரீத்தி, இந்த காட்சியை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். அவன் அருகே சென்றவள், அவனை மட்டும் தன் அறைக்கு வருமாறு கூறிவிட்டு, அவனிடம் அவனின் பாதுகாவலர்களை எல்லாம் மருத்துவமனை வெளியே இருக்க சொல்லி கூறினாள்.
“அவங்க என் செக்யூரிட்டிஸ், என் பாதுகாப்புக்கு என் கூடவே தான் இருப்பாங்க” என்று அழுத்தம் திருத்தமாக கூறி, அவர்களும் என்னோடு உன் அறைக்கு வருவார்கள் என்று சொல்லாமல் சொன்னான்.
“இது ஹாஸ்பிட்டல், எல்லா இடத்துல cctv கேமரா இருக்கு. எல்லாத்துக்கும் மேல, உங்க கைல போன் இருக்கு, ஆபத்துன்னு தோணுச்சுன்னா அப்போ கூப்பிடுங்க உங்க செக்யூரிட்டிஸ் வருவாங்க”.
“இப்போ இங்க நீங்க என் பேஷன்ட், நான் சொல்லுறதை தான் கேட்கணும். கேட்க பிடிக்கல அப்படின்னா, தாராளமா நீங்க வெளியே போகலாம்” என்று கூறி தோளை குலுக்கிவிட்டு உள்ளே செல்லவும், இவன் அவளை முறைத்துக் கொண்டே அவள் பின்னே சென்றான்.
மறக்காமல், தலைமை செக்யூரிட்டியிடம் நான் கூப்பிடும் பொழுது வந்து சேர வேண்டும் என்று சொல்லிவிட்டே, அவள் பின்னோடு சென்றான்.
“சுமதி சிஸ்டர்! இவருக்கு இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துடுங்க இப்போ, அப்புறம் கயல்விழி மேடம் வந்த உடனே இங்க என்னை பார்க்க வர சொல்லுங்க” என்று கூறிவிட்டு அவள் இடத்தில் அமர்ந்தாள்.
“மிஸ் ப்ரீத்தி! நீங்க மனோதத்துவ டாக்டர் தான, அதுக்கு எதுக்கு ரத்த பரிசோதனை எல்லாம்? நிஜமாவே, நீங்க டாக்டர் தானா?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“ நாலு வருஷமா, நீங்க போதை பழக்கத்துக்கு அடிமையா இருந்து இருக்கீங்க, சிகெரட், தண்ணின்னு எல்லா கெட்ட பழக்கமும் உங்களுக்கு இருந்து இருக்கு. சோ, இது இப்போ ரொம்ப முக்கியம்” என்று முறைத்துக் கொண்டே கூறியவளை பார்த்து, யோசனையுடன் அங்கு இருந்து சென்றான்.
ரத்தம் கொடுத்துவிட்டு, அதன் பின் மற்ற பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு அவன் அவள் இருக்குமிடம் வரவே மதியம் ஒரு மணியானது.
“ரெண்டு நாள் கழிச்சு வாங்க, ரிசல்ட் பொருத்து ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறேன்” என்று கூறியவளை பார்த்து உற்று நோக்கினான்.
“சஞ்சனா, உண்மைக்குமே உன் கண்ணுக்கு இப்போ தெரிஞ்சா கேட்டு சொல்லு அவ கிட்ட. நான் தான் ட்ரீட்மென்ட் எடுக்க ஒத்துகிட்டேனே, அவளுக்கு என்ன நடந்ததுன்னு கேட்டு சொல்லு” என்று ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டான்.
அவனை பொறுத்தவரை, இவளுக்கும் சஞ்சுவுக்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நிச்சயம் அவள் இறந்ததற்க்கான காரணம் அவளுக்கு தெரிந்து இருக்கும், ஆனால் தன்னிடம் சொல்ல ஏன் இந்த தாமதம் என்று புரியவில்லை.
ஒரு வேளை, இவள் தன்னை விரும்பி இருப்பாளோ அதான் அவளை வைத்து நம்மிடம் இப்பொழுது விளையாடி பார்க்க எண்ணுகிறாளா என்றும் சந்தேகம் வந்தது. ஆகையால் தான், அவளிடம் அவள் செல்லும் பாதையிலே கேள்வி கேட்டான்.
“எனக்கு பேய் கண்ணுக்கு தெரியுமா, தெரியாதான்னு டெஸ்ட் பண்ண நினைக்குறீங்க போல” என்று புருவம் உயர்த்தி வினவினாள்.
தன்னை கண்டுகொண்டாளே என்று, கோவத்தில் அவன் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றான். அவன் அப்படி செல்வதை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டு அவள் வேலையை கவனிக்க தொடங்கினாள்.
கோபத்துடன் வெளியே வந்த வருண், தன் டிரைவரிடம் காரை எடுக்க சொல்லி பணித்துவிட்டு பின் சீட்டில் கண் மூடி சாய்ந்து அமர்ந்து யோசனைக்கு சென்றான்.
“உங்க சஞ்சுவை கொன்னுட்டாங்க, உங்களுக்கும் சஞ்சுவுக்கும் பாஸ் கோட் 3614 சரியா” என்று சஞ்சனாவை மட்டும் அல்லாது தன்னையும் அறிந்தவள் போல் அவள் பேசிய விதம் அவனை யோசிக்க வைத்தது.
அவனுக்கு பேய், ஆவி இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆகையால், அவனுக்கு ப்ரீத்தியின் மேல் தான் சந்தேகம். அவளுக்கு சஞ்சனா குறித்து விஷயம் தெரிந்து இருக்கிறது, அதை என்னிடம் சொல்ல நினைக்கிறாள்.
ஆனால், இந்த நான்கு கொடிய ஆண்டுகள் தான் வாழ்ந்த வாழ்கையை அறிந்து முதலில் அதை சீர் செய்ய எண்ணுகிறாள் என்பதை புரிந்து கொண்டான். ஆனால், உண்மையில் சஞ்சனா கொலை செய்யப்பட்டாளா, அல்லது வேறு எதுவும் பிரச்சனையா என்று அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, அவனுக்கு ப்ரீத்தியின் மேலே நிறைய சந்தேகம் இருக்கிறது. தன் சொத்துக்காக கூட, அவள் சஞ்சனாவை கொலை செய்து இருந்தால், இது தான் அவனுக்கு இப்பொழுது மிக பெரிய சந்தேகம்.
நேராக வீட்டிற்கு வந்தவன், சமையல்கார அம்மா செய்து வைத்து இருந்த சாப்பாட்டை கூட சாப்பிடாமல் அவன் அறைக்கு சென்று கதவை அடித்துக் கொண்டான். மனம் முழுவதும், அவனும் சஞ்சுவும் வைத்த பாஸ் கோட் 3614 பற்றிய சிந்தனை ஓடியது.
“வருண், நமக்கான பாஸ்கோட் ஒன்னு வச்சுக்கலாம் சரியா. நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவான விஷயம் எல்லாம், இந்த வருடத்தில் ஜூன் 3 அப்போ நடந்தது, உங்களுக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்டாள் சஞ்சு.
“ம்ம்.. நல்லா நியாபகம் இருக்கு, அன்னைக்கு தான் நாம காதலை சொல்லிகிட்டோம். அன்னைக்கு தான், நம்ம ரெண்டு பேர் உடைய அம்மா, அப்பா கல்யாண நாள்ன்னு தெரிஞ்சிகிட்டோம்” என்று கூறி சிரித்தான்.
“ம்ம்.. exactly அதனால நம்ம பாஸ்கோட் 3614. இந்த பாஸ்கோட் வேற ஒருத்தருக்கு தெரியுது அப்படினா, அவங்க ஒன்னு நம்மளை வேவு பார்க்கிறவங்களா இருக்கணும் அதாவது கெட்டவங்க, இல்லை நம்ம பெஸ்டியா இருக்கணும் அதாவது நமக்கு உதவி செய்பவர்கள்” என்று கூறி சிரித்தவளை பார்த்து தானும் சிரித்தான்.
இப்பொழுது, அதை யோசித்து பார்த்தால் ப்ரீத்தி வேவு பார்த்தாளா! அல்லது உண்மையாகவே உதவி புரிய வந்து இருக்கிறாளா! என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தான்.
இப்படியே திண்டாடிக் கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் தலைவலி வரவும், உடனே எப்பொழுதும் எடுக்கும் மாத்திரையை எடுத்து சட்டென்று போட போனான். ஆனால், போட முடியாமல் ப்ரீத்தியின் அறிவுரைகள் காதில் விழுந்து, அவனை எரிச்சல் அடைய வைத்தது.
கீழே இறங்கி வந்தவன், பசியில் காத்து அடைத்தது போல் வேறு இருக்கவும், உடனே டைனிங் மேஜை சென்று அங்கு இருந்த உணவினை எடுத்து சிறிது கொறித்து விட்டு, மீண்டும் மருத்துவமனை நோக்கி சென்றான்.
மருத்துவமனையில், அவளின் சீனியர் கயல்விழி மேடம் உடன் இவனின் கேஸ் ஹிஸ்டரி கூறி, அவனுக்கு அளிக்க போகும் சிகிச்சை பற்றி அவரிடம் கேட்டு விவாதித்துக் கொண்டு இருந்தாள்.
“ப்ரீத்தி! எல்லாம் சரி, ஆனா முதல அந்த பையனோட மனநிலை ரொம்ப முக்கியம். இந்த ட்ரீட்மென்ட் கிட்ட தட்ட ஷாக் ட்ரீட்மென்ட் மாதிரி, இதுல ரிஸ்க் அதிகம் இருக்கு. சோ இதை நீ ரொம்ப ஜாக்கிரதையா தான் டீல் பண்ணனும், ஏன்னா இதோட process அப்படி” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே, வருண் அங்கே கோபத்துடன் ப்ரீத்தி முன் வந்து நின்றான்.
காலை வேளை அந்த மருத்துவமனையில், பெரும் பரபரப்பு ஓடிக் கொண்டு இருந்தது. அந்த பரபரப்புக்கு காரணம், வருண் அங்கே வந்தது தான்.
அவன் மட்டுமாக வரவில்லை, அவனின் செக்யூரிட்டிகள் படை சூழ வந்து இறங்கி இருந்தான். வரவேற்ப்பில், டாக்டர் ப்ரீத்தியை பார்க்க வேண்டும் என்று கூறி அங்கே போடப்பட்டு இருந்த நாற்காலியில், கம்பீரமாக அமர்ந்து இருந்தான்.
அங்கு வேலை செய்து கொண்டு இருந்த செவிலியர்கள், குளிர் கண்ணாடி அணிந்து கம்பீரமாக அமர்ந்து இருந்த அவனை பார்த்து ஜொள்ளிக் கொண்டு இருந்தனர்.
தன் மற்ற வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, அங்கே வரவேற்பறை வந்த ப்ரீத்தி, இந்த காட்சியை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். அவன் அருகே சென்றவள், அவனை மட்டும் தன் அறைக்கு வருமாறு கூறிவிட்டு, அவனிடம் அவனின் பாதுகாவலர்களை எல்லாம் மருத்துவமனை வெளியே இருக்க சொல்லி கூறினாள்.
“அவங்க என் செக்யூரிட்டிஸ், என் பாதுகாப்புக்கு என் கூடவே தான் இருப்பாங்க” என்று அழுத்தம் திருத்தமாக கூறி, அவர்களும் என்னோடு உன் அறைக்கு வருவார்கள் என்று சொல்லாமல் சொன்னான்.
“இது ஹாஸ்பிட்டல், எல்லா இடத்துல cctv கேமரா இருக்கு. எல்லாத்துக்கும் மேல, உங்க கைல போன் இருக்கு, ஆபத்துன்னு தோணுச்சுன்னா அப்போ கூப்பிடுங்க உங்க செக்யூரிட்டிஸ் வருவாங்க”.
“இப்போ இங்க நீங்க என் பேஷன்ட், நான் சொல்லுறதை தான் கேட்கணும். கேட்க பிடிக்கல அப்படின்னா, தாராளமா நீங்க வெளியே போகலாம்” என்று கூறி தோளை குலுக்கிவிட்டு உள்ளே செல்லவும், இவன் அவளை முறைத்துக் கொண்டே அவள் பின்னே சென்றான்.
மறக்காமல், தலைமை செக்யூரிட்டியிடம் நான் கூப்பிடும் பொழுது வந்து சேர வேண்டும் என்று சொல்லிவிட்டே, அவள் பின்னோடு சென்றான்.
“சுமதி சிஸ்டர்! இவருக்கு இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துடுங்க இப்போ, அப்புறம் கயல்விழி மேடம் வந்த உடனே இங்க என்னை பார்க்க வர சொல்லுங்க” என்று கூறிவிட்டு அவள் இடத்தில் அமர்ந்தாள்.
“மிஸ் ப்ரீத்தி! நீங்க மனோதத்துவ டாக்டர் தான, அதுக்கு எதுக்கு ரத்த பரிசோதனை எல்லாம்? நிஜமாவே, நீங்க டாக்டர் தானா?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“ நாலு வருஷமா, நீங்க போதை பழக்கத்துக்கு அடிமையா இருந்து இருக்கீங்க, சிகெரட், தண்ணின்னு எல்லா கெட்ட பழக்கமும் உங்களுக்கு இருந்து இருக்கு. சோ, இது இப்போ ரொம்ப முக்கியம்” என்று முறைத்துக் கொண்டே கூறியவளை பார்த்து, யோசனையுடன் அங்கு இருந்து சென்றான்.
ரத்தம் கொடுத்துவிட்டு, அதன் பின் மற்ற பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு அவன் அவள் இருக்குமிடம் வரவே மதியம் ஒரு மணியானது.
“ரெண்டு நாள் கழிச்சு வாங்க, ரிசல்ட் பொருத்து ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறேன்” என்று கூறியவளை பார்த்து உற்று நோக்கினான்.
“சஞ்சனா, உண்மைக்குமே உன் கண்ணுக்கு இப்போ தெரிஞ்சா கேட்டு சொல்லு அவ கிட்ட. நான் தான் ட்ரீட்மென்ட் எடுக்க ஒத்துகிட்டேனே, அவளுக்கு என்ன நடந்ததுன்னு கேட்டு சொல்லு” என்று ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டான்.
அவனை பொறுத்தவரை, இவளுக்கும் சஞ்சுவுக்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நிச்சயம் அவள் இறந்ததற்க்கான காரணம் அவளுக்கு தெரிந்து இருக்கும், ஆனால் தன்னிடம் சொல்ல ஏன் இந்த தாமதம் என்று புரியவில்லை.
ஒரு வேளை, இவள் தன்னை விரும்பி இருப்பாளோ அதான் அவளை வைத்து நம்மிடம் இப்பொழுது விளையாடி பார்க்க எண்ணுகிறாளா என்றும் சந்தேகம் வந்தது. ஆகையால் தான், அவளிடம் அவள் செல்லும் பாதையிலே கேள்வி கேட்டான்.
“எனக்கு பேய் கண்ணுக்கு தெரியுமா, தெரியாதான்னு டெஸ்ட் பண்ண நினைக்குறீங்க போல” என்று புருவம் உயர்த்தி வினவினாள்.
தன்னை கண்டுகொண்டாளே என்று, கோவத்தில் அவன் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றான். அவன் அப்படி செல்வதை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டு அவள் வேலையை கவனிக்க தொடங்கினாள்.
கோபத்துடன் வெளியே வந்த வருண், தன் டிரைவரிடம் காரை எடுக்க சொல்லி பணித்துவிட்டு பின் சீட்டில் கண் மூடி சாய்ந்து அமர்ந்து யோசனைக்கு சென்றான்.
“உங்க சஞ்சுவை கொன்னுட்டாங்க, உங்களுக்கும் சஞ்சுவுக்கும் பாஸ் கோட் 3614 சரியா” என்று சஞ்சனாவை மட்டும் அல்லாது தன்னையும் அறிந்தவள் போல் அவள் பேசிய விதம் அவனை யோசிக்க வைத்தது.
அவனுக்கு பேய், ஆவி இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆகையால், அவனுக்கு ப்ரீத்தியின் மேல் தான் சந்தேகம். அவளுக்கு சஞ்சனா குறித்து விஷயம் தெரிந்து இருக்கிறது, அதை என்னிடம் சொல்ல நினைக்கிறாள்.
ஆனால், இந்த நான்கு கொடிய ஆண்டுகள் தான் வாழ்ந்த வாழ்கையை அறிந்து முதலில் அதை சீர் செய்ய எண்ணுகிறாள் என்பதை புரிந்து கொண்டான். ஆனால், உண்மையில் சஞ்சனா கொலை செய்யப்பட்டாளா, அல்லது வேறு எதுவும் பிரச்சனையா என்று அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, அவனுக்கு ப்ரீத்தியின் மேலே நிறைய சந்தேகம் இருக்கிறது. தன் சொத்துக்காக கூட, அவள் சஞ்சனாவை கொலை செய்து இருந்தால், இது தான் அவனுக்கு இப்பொழுது மிக பெரிய சந்தேகம்.
நேராக வீட்டிற்கு வந்தவன், சமையல்கார அம்மா செய்து வைத்து இருந்த சாப்பாட்டை கூட சாப்பிடாமல் அவன் அறைக்கு சென்று கதவை அடித்துக் கொண்டான். மனம் முழுவதும், அவனும் சஞ்சுவும் வைத்த பாஸ் கோட் 3614 பற்றிய சிந்தனை ஓடியது.
“வருண், நமக்கான பாஸ்கோட் ஒன்னு வச்சுக்கலாம் சரியா. நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவான விஷயம் எல்லாம், இந்த வருடத்தில் ஜூன் 3 அப்போ நடந்தது, உங்களுக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்டாள் சஞ்சு.
“ம்ம்.. நல்லா நியாபகம் இருக்கு, அன்னைக்கு தான் நாம காதலை சொல்லிகிட்டோம். அன்னைக்கு தான், நம்ம ரெண்டு பேர் உடைய அம்மா, அப்பா கல்யாண நாள்ன்னு தெரிஞ்சிகிட்டோம்” என்று கூறி சிரித்தான்.
“ம்ம்.. exactly அதனால நம்ம பாஸ்கோட் 3614. இந்த பாஸ்கோட் வேற ஒருத்தருக்கு தெரியுது அப்படினா, அவங்க ஒன்னு நம்மளை வேவு பார்க்கிறவங்களா இருக்கணும் அதாவது கெட்டவங்க, இல்லை நம்ம பெஸ்டியா இருக்கணும் அதாவது நமக்கு உதவி செய்பவர்கள்” என்று கூறி சிரித்தவளை பார்த்து தானும் சிரித்தான்.
இப்பொழுது, அதை யோசித்து பார்த்தால் ப்ரீத்தி வேவு பார்த்தாளா! அல்லது உண்மையாகவே உதவி புரிய வந்து இருக்கிறாளா! என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தான்.
இப்படியே திண்டாடிக் கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் தலைவலி வரவும், உடனே எப்பொழுதும் எடுக்கும் மாத்திரையை எடுத்து சட்டென்று போட போனான். ஆனால், போட முடியாமல் ப்ரீத்தியின் அறிவுரைகள் காதில் விழுந்து, அவனை எரிச்சல் அடைய வைத்தது.
கீழே இறங்கி வந்தவன், பசியில் காத்து அடைத்தது போல் வேறு இருக்கவும், உடனே டைனிங் மேஜை சென்று அங்கு இருந்த உணவினை எடுத்து சிறிது கொறித்து விட்டு, மீண்டும் மருத்துவமனை நோக்கி சென்றான்.
மருத்துவமனையில், அவளின் சீனியர் கயல்விழி மேடம் உடன் இவனின் கேஸ் ஹிஸ்டரி கூறி, அவனுக்கு அளிக்க போகும் சிகிச்சை பற்றி அவரிடம் கேட்டு விவாதித்துக் கொண்டு இருந்தாள்.
“ப்ரீத்தி! எல்லாம் சரி, ஆனா முதல அந்த பையனோட மனநிலை ரொம்ப முக்கியம். இந்த ட்ரீட்மென்ட் கிட்ட தட்ட ஷாக் ட்ரீட்மென்ட் மாதிரி, இதுல ரிஸ்க் அதிகம் இருக்கு. சோ இதை நீ ரொம்ப ஜாக்கிரதையா தான் டீல் பண்ணனும், ஏன்னா இதோட process அப்படி” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே, வருண் அங்கே கோபத்துடன் ப்ரீத்தி முன் வந்து நின்றான்.