காதல் நீலாம்பரி எந்த வகை நாவல்னா மத்தவங்களால மட்டுமில்லீங்க..என்னாலயும் இனம் பிரிச்சுச் சொல்ல முடியாது..அது ஒரு நாவல்..அவ்வளவு தான் !
பெண்மை..
....................
நான பல எடங்கள்ல சொல்லி இருக்கேன்..பெண்கள் பற்றிய ஆச்சரியமும்,தேடலும் எனக்கு என் அம்மாவிலிருந்து தொடங்கியது..இத்தனை வருச வாழ்வானுபவத்துல முழுக்கக் கெட்டவளை,வாழவே தகுதியில்லாத ஒரு பெண்ணை இது வரை நான் சந்திக்கவே இல்லை..
ஒரு சின்ன உதாரணம் ! எனக்கு மேல் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை எல்லா உறவுகளிலும் பெண்கள் உண்டு..சத்திய மங்கலம் கொளத்தூரில் மலை வாசிகளோடு 15நாள் தங்கியிருக்கிறேன்.. பெருந்துறை வாய்க்கால் மேடு நரிக் குறவர் குடியிருப்பில் ஒரு மாதம் தங்கி அவர்கள் வாழ்வியலைத் தேடியிருக்கிறேன்.. பெருந்துறை புது பேருந்து நிலையத்தில் பிச்சையெடுக்கும் பாப்பாம்மாவைக் கண்டால் கட்டிங்குக்குக் காசும்,சுருட்டும் வாங்கிக் கொடுத்துப் அஞ்சு நிமிசம் பேசாமல் வர மாட்டேன்..முக நூலுக்கு வந்த பின் டாக்டர்,வக்கீல்,இஞ்சீனியர் என மெத்தப் படித்தவர்களுடன் நட்பானேன்..
விதங்கள் வேறு படாமலே தவிர நேரிலோ,போனிலோ பேச்சைத் துவங்கியவுடன் அவர்களின் முதல் கேள்வியே "சாப்டீங்களா?"என்பதாகத் தான் இருக்கும்.. அதுவே தாய்மையின் அம்சம் ! (பெருந்துறை பிச்சைக்கார பாப்பம்மா..."மவராசரே ! நல்லா இருக்கீங்களா..சாப்டீங்களா?வேளா வேளைக்கு கொஞ்சமாவது கொலைய நனைச்சுக்கணும் சாமி")
இப்பவும்..எப்பவும் சொல்வேன் கவிம்மா ! பெண்மையில் மிஞ்சி,எஞ்சி நிற்பது தாய்மை மட்டுமே !
ரெண்டாம் பாகத்துல மனுவ எப்படிக் கொண்டு வர முடியும் கவிம்மா?அருக்காணி அம்மா சாவுக்கப்புறம் பிளாஸ் பேக்கா சித்ர மாலா கதைய கந்தசாமி சொல்றார்..இதுக்குள்ள மனுவ நொழைச்சா பிச்சுக்கிட்டுத் தனியாத் தெரியும்..ரெண்டாவது சித்ர மாலா கேரக்டர் பலவீனப் படும்..பிளாஸ் பேக்குக்கு அப்புறம் மனு ஏறக்குறைய கோமா.. அவங்க ஆஸ்பிடலுக்குப் போனதும் கதை இருநூறு சதவிகிதம் ஆக்சன்ல எறங்கிடுது..சங்கர் படம் மாதிரி கிளைமாக்ஸ்க்கு முன்ன ஒரு "ரண்டக்க ரண்டக்க'' வெக்கலாம்னா ஒட்டாதே?
சக்தி..!!அதுல நானும் உண்டு.. என் காதல்,குடி,புகை, கோபம்,முரட்டுத்தனம்..அவ்வளவே ! மத்தபடி அவனப் பாராட்டி நீங்க சொன்ன குணங்கள் எல்லாம் நான் இப்படி இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேங்கற என் ஏக்கங்களே !சக்தியில் நானும் உண்டு..ஆனாவ், சக்தி நானல்ல !
ரொமான்ஸப் பொறுத்த வரைக்கும்.. சக்தி மனுவோட காதலையோ,சித்ர மாலோவோட வெளிப் படையான அழைப்பையோ அவன் மறுக்கும் போது எந்த எடத்துல அதக் கொண்டு வர முடியும் சொல்லுங்க?ஒரு சிலர் ரொமான்ஸ் இல்லேன்னு சொல்லியும் என்னால அதத் திணிக்க முடியல..கதைப் போக்கு என் கையை கட்டி விட்டது..
என் இரு அத்தியாயங்களுக்கு 'வயது வந்தோர்க்கு மட்டும்'முத்திரை குத்தப் பட்டது எனக்குச் சங்கடம் தான் ! அப்போதே வெளியேற நினைத்ததும் உண்டு.. விஜி மேடமும்,*** தங்கங்களும் இது வரை வாசித்தவர்களுக்காகவாவது அங்கு மேலும் அதைத் தொடர வேண்டும்னு சொன்னதால் கதை முழுமை பெற்றது..
அவங்க எனக்கு வெத்தலை,பாக்கு வச்சுக் கூப்பிடல.. நானா வந்தேன்..அப்ப அவங்க கண்டிசன்ஸ்க்கு ஒத்துக்கிட்டுத் தான் ஆகணும்..அந்த முத்திரைக்குப் பின்னாலயும் கதை தொடரப் பட்டது உங்களுக்காக !
காதலையும்,காமத்தையும் நேசிப்பவன்..கட்டுப் பாடுகள் அற்ற வாழ்வைக் கடந்தவன் தான் நான் ! ,ஆனால்,என் மனதில் காமம் வக்கிரமாக ஒரு நாளும் அனுமதித்தில்லை..மனசுல பட்டதத் துளியும் தயங்காம எழுதறவன் தான் நான் ! ஆனா, எழுத்தாளனுக்கு கண்ணுக்குத் தெரியாத லட்சமணன் எல்லைக் கோடு இருக்கறதா நம்பறவன் ! தவறுகளையே வாழ்வாகக் கொண்டவன் தான் நான் ! ஆனால்,என் எழுத்தால் ஒருவர் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்ப் பட்டது நிரூபணமானால் அதோடு எழுத்துக்கே தலை முழுகுவேன்..
என்னால நெருக்கடில எழுத முடியாது கவிம்மா.. அதனால தான் ஜனவரில வேட்டைக்காரன முடிச்சுட்டு பிப்ரவரி 14ல விழி ஈர்ப்பு விசைய வேற சைட்ல தொடங்கறேன்..
கடைசியா..
இந்த சில மாதங்கள் நான் எழுதல..என் பழைய நினைவுகளோடு,அண்ணந் தங்கையா,தோழமையுடன் உங்களோடு வாழ்ந்தேன் என்பதே மறுக்க முடியாத உண்மை என ஒப்புக் கொண்டு..
நகைச்சுவைங்கற பேர்ல உங்க யார் மனசையாவது கமெண்ட்ல புண் படுத்தியிருந்தா மனமார மன்னிப்பை வேண்டி அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்த்துடன்..
நன்றி...நன்றி..நன்றி !