K
kavi sowmi
Guest
காலை ஏழு மணியை தொடவும் இவர்கள் அபிநந்தன் வீட்டிற்கு வந்து இறங்கினர். கால்டாக்சியை விட்டு இறங்கும் முன்னமே அத்தை என்ன சத்தமிட்டபடி ஒடி வந்த பூஜாவை அதே மகிழ்ச்சியோடு தூக்கியவள்... தன்னோடு அணைத்தபடி பூஜாகுட்டி எப்படி இருக்கறிங்க என அவளிடம் கொஞ்சியபடி வீட்டிற்குள் நுழைந்தாள். பார்த்த அபி தான் அப்படியே அதிர்ச்சியில் சிலையாக நின்றிருந்தான். எந்த கேப்லடா.. இந்த அளவுக்கு பாச பயிரை வளர்த்தாங்க என்ன நினைக்க...
அதை விட ஆர்பாட்டமாக பின்னால் தாரிகா வந்திருந்தாள். ஹாய் அபி அண்ணா. .. உனக்கு முன்னாடி நான் தான் வந்தேன் பார்த்தாயா... இவனிடம் பேசிக்கொண்டு இருக்க மதுசூதனனை வரவேற்ற மூர்த்தி வாடா எத்தனை நாள் ஆச்சு... இடையிடையே வான்னா கேட்கவா செய்யற.. என்ன வினவியபடி அழைத்து சென்றார்.
பூஜாவோடு உள் நுழைந்த மலர் அவர்களது ஹாலிற்குல் பிரவேசித்தவளை அபியின் தாய் தேவகி வரவேற்றார். வாம்மா மலர் நிஜமாகவே பூவை மாதிரி தான் இருக்கற.. வா.. வா வரவேற்று அமர வைக்க.. அமர்ந்தபடி சுற்றிலும் பார்க்க அபியினுடைய வீடு இவர்களது வீட்டை விடவும் இருமடங்கு பெரியது. பெரிய ஹால் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் உட்புறமிருந்து துவங்க இரண்டு மாடிகளை கட்டி இருந்தனர்.
இவளை அமர வைத்தவர் வந்தவர்களுக்கு ஜூஸ் எடுத்து வர சென்றிருக்க.. பின்னால் தாருவோடு பேசிக்கொண்டு வந்தவன் இவள் அமர்ந்து இருப்பதை பார்த்து இவள் அருகில் அமர அவனை தொடர்ந்து அடுத்த இருக்கையில் தாரிகா அமர்ந்தாள். பூஜாவோ மாமா என இவனிடம் தாவி இருந்தாள்.
மடியில் தாங்கியவன் எங்க வீடு பிடிச்சிருக்கா என கேட்க...
அவனுக்கு பதில் சொல்லாமல் பாட்டிய எப்ப பார்க்க போகலாம் என கேட்க... இதை கேட்கவே திணறி இருந்தாள். பூஜா இப்போது அவனை தாண்டி அவனது தங்கை தாரிகாவிடம் தாவி இருந்தாள். அவளது வீட்டிலும் அருகில் அமர்வான்தான் ஆனாலும் இவ்வளவு அருகில் அமர்ந்தது இல்லை. அபியிடைய தாயார் தன்னை பற்றி என்ன நினைப்பார் இதை நினைத்தவளுக்கு இன்னும் பயமாக இருந்தது.
தேவகி ஜூஸ் எடுத்து வரவும் வேகமாக எழுந்தவள் அவரிடம் அன்ட்டி நான் எல்லோரும் தர்றேன் என வாங்க..
என்னமா... நாங்க உன்ன கவனிக்கணும் நீ எங்கள கவனிக்க வர்ற...தாரு இதையெல்லாம் நீ கத்துக்கோ..
ஓ... கத்துக்கலாமே.. மலர் இத குடு அப்படியே இந்த இடத்தில் உட்காரு என எழுந்த இடத்தில் அமர வைத்தவள் இப்ப ஜஸூ குடி நான் அப்பாவுக்கும் அங்கிள்க்கும். கொடுத்திட்டு வரேன். இந்த அப்பாவுக்கு பேச ஆள் கிடைச்சா போதும் அங்கேயே நின்றிடுவாங்க... இன்னமும் போர்டிகோவில் பேசியபடி நின்ற தந்தையை நோக்கி சென்றாள்.
மறுபடியும் அவன் புறம் அமர நன்றாக அவள் அவள்அருகில் நெருங்கி அமர்ந்தான. பக்கத்தில் உட்கார்ந்ததால தானே எழுந்து ஓடின என்ற கேள்வியோடு..
பார்த்தா என்ன நினைப்பாங்க... நகர்ந்து உட்காருங்க... பாட்டிய எப்படி பார்க்க போகலாம்..
முதல்ல கைல இருக்கிறதா குடி குளிச்சிட்டு சாப்பிட்ட பிறகு போகலாம்... பாட்டி பின்னாடி இருக்கற ரூம்ல இருக்கறாங்க... எழுந்தவன் இரு தாருவ வரச்சொல்லறேன். ரெடி ஆனதும் போகலாம் என்றபடி பின் புறப்பட்டு தோட்டத்திற்குள் நுழைந்தான்.
அடுத்த ரெண்டாவது நொடி தாரு வர..அண்ணா எங்க மலர் ...
இந்த வழியா போணாங்க...
சூப்பர் வா...வா... இன்றைக்கு அவன் காலி.. இவளது கை பிடித்து இழுத்தவள் பின் புறம் செல்ல அங்கே அபி டியூப்பில் தண்ணீர் பாய்த்துக்கொண்டு இருந்தான். இங்கே எப்ப வந்தாலும் தண்ணீர் விட வந்திடுவான். இவன்கிட்ட எனக்கு ஒரு பாக்கி இருக்கு... வா..
என்னது...
வா...வா... நான் சொல்லறேன் லாஸ்ட் டைம் வந்தப்ப தண்ணீர் விடறேன்னு என்னைய குளிப்பாட்டி விட்டான். இன்றைக்கு மாட்டிக்க போறான். அவனது அருகில் நெருங்கியவள் ஒரு நொடியில் அவனது கையில் இருந்து பிடிக்கியவள் அவனது மேல் தண்ணீர் விட அடுத்த நொடி கீழே போட்டு விட்டு அண்ணா நான் வின் ஆயிடுட்டேன். சொன்னமாதிரி தண்ணீர் விட்டுவிட்டேன் என சிரிக்க...ஒரு நொடியில் அதை கையில் எடுத்தவன்
இருவர் மீதும் தண்ணீர் விட ஆரம்பித்தான்.
அபி வேண்டாம் என மலரும் அண்ணா வேண்டாம் என தாரிகாவும் கத்த மாமா என ஓடி வந்த பூஜாவிடம் பைப்பை தந்தவன் அவளை தோளில் தூக்கியபடி நீ அடி செல்லம்... மாமா வேடிக்கை பார்க்கிறேன் என நிற்க..அவர்கள் நகர்ந்த பக்கம் துரத்தியபடி தண்ணீரை பிய்ச்சி அடிக்க... பூஜாவிற்கு அவ்வளவு சந்தோஷம். .. சிரித்தபடி அம்மாவின் மேல் மலரின் மேல் என மாறி மாறி தண்ணீரை ஊற்றிக் கொண்டு இருந்தாள். அடுத்த பத்தாவது நிமிடம் தேவகி துண்டோடு வந்திருந்தார். தெரியுமே இது தான் நடக்கும்ன்னு பூஜாவுக்கு சளி பிடிச்சிட போகுது... இறக்கி விடு அபி.. போய் துணியை மாத்திட்டு வாங்க... பாட்டி ரொம்ப நேரமாக காத்து இருக்கறாங்க உங்கள் பார்க்க...
ஸாரி மா...இதோ போகிறேன் என அபியும் கூடவே இவர்களும் நகர்ந்தனர்.
அதை விட ஆர்பாட்டமாக பின்னால் தாரிகா வந்திருந்தாள். ஹாய் அபி அண்ணா. .. உனக்கு முன்னாடி நான் தான் வந்தேன் பார்த்தாயா... இவனிடம் பேசிக்கொண்டு இருக்க மதுசூதனனை வரவேற்ற மூர்த்தி வாடா எத்தனை நாள் ஆச்சு... இடையிடையே வான்னா கேட்கவா செய்யற.. என்ன வினவியபடி அழைத்து சென்றார்.
பூஜாவோடு உள் நுழைந்த மலர் அவர்களது ஹாலிற்குல் பிரவேசித்தவளை அபியின் தாய் தேவகி வரவேற்றார். வாம்மா மலர் நிஜமாகவே பூவை மாதிரி தான் இருக்கற.. வா.. வா வரவேற்று அமர வைக்க.. அமர்ந்தபடி சுற்றிலும் பார்க்க அபியினுடைய வீடு இவர்களது வீட்டை விடவும் இருமடங்கு பெரியது. பெரிய ஹால் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் உட்புறமிருந்து துவங்க இரண்டு மாடிகளை கட்டி இருந்தனர்.
இவளை அமர வைத்தவர் வந்தவர்களுக்கு ஜூஸ் எடுத்து வர சென்றிருக்க.. பின்னால் தாருவோடு பேசிக்கொண்டு வந்தவன் இவள் அமர்ந்து இருப்பதை பார்த்து இவள் அருகில் அமர அவனை தொடர்ந்து அடுத்த இருக்கையில் தாரிகா அமர்ந்தாள். பூஜாவோ மாமா என இவனிடம் தாவி இருந்தாள்.
மடியில் தாங்கியவன் எங்க வீடு பிடிச்சிருக்கா என கேட்க...
அவனுக்கு பதில் சொல்லாமல் பாட்டிய எப்ப பார்க்க போகலாம் என கேட்க... இதை கேட்கவே திணறி இருந்தாள். பூஜா இப்போது அவனை தாண்டி அவனது தங்கை தாரிகாவிடம் தாவி இருந்தாள். அவளது வீட்டிலும் அருகில் அமர்வான்தான் ஆனாலும் இவ்வளவு அருகில் அமர்ந்தது இல்லை. அபியிடைய தாயார் தன்னை பற்றி என்ன நினைப்பார் இதை நினைத்தவளுக்கு இன்னும் பயமாக இருந்தது.
தேவகி ஜூஸ் எடுத்து வரவும் வேகமாக எழுந்தவள் அவரிடம் அன்ட்டி நான் எல்லோரும் தர்றேன் என வாங்க..
என்னமா... நாங்க உன்ன கவனிக்கணும் நீ எங்கள கவனிக்க வர்ற...தாரு இதையெல்லாம் நீ கத்துக்கோ..
ஓ... கத்துக்கலாமே.. மலர் இத குடு அப்படியே இந்த இடத்தில் உட்காரு என எழுந்த இடத்தில் அமர வைத்தவள் இப்ப ஜஸூ குடி நான் அப்பாவுக்கும் அங்கிள்க்கும். கொடுத்திட்டு வரேன். இந்த அப்பாவுக்கு பேச ஆள் கிடைச்சா போதும் அங்கேயே நின்றிடுவாங்க... இன்னமும் போர்டிகோவில் பேசியபடி நின்ற தந்தையை நோக்கி சென்றாள்.
மறுபடியும் அவன் புறம் அமர நன்றாக அவள் அவள்அருகில் நெருங்கி அமர்ந்தான. பக்கத்தில் உட்கார்ந்ததால தானே எழுந்து ஓடின என்ற கேள்வியோடு..
பார்த்தா என்ன நினைப்பாங்க... நகர்ந்து உட்காருங்க... பாட்டிய எப்படி பார்க்க போகலாம்..
முதல்ல கைல இருக்கிறதா குடி குளிச்சிட்டு சாப்பிட்ட பிறகு போகலாம்... பாட்டி பின்னாடி இருக்கற ரூம்ல இருக்கறாங்க... எழுந்தவன் இரு தாருவ வரச்சொல்லறேன். ரெடி ஆனதும் போகலாம் என்றபடி பின் புறப்பட்டு தோட்டத்திற்குள் நுழைந்தான்.
அடுத்த ரெண்டாவது நொடி தாரு வர..அண்ணா எங்க மலர் ...
இந்த வழியா போணாங்க...
சூப்பர் வா...வா... இன்றைக்கு அவன் காலி.. இவளது கை பிடித்து இழுத்தவள் பின் புறம் செல்ல அங்கே அபி டியூப்பில் தண்ணீர் பாய்த்துக்கொண்டு இருந்தான். இங்கே எப்ப வந்தாலும் தண்ணீர் விட வந்திடுவான். இவன்கிட்ட எனக்கு ஒரு பாக்கி இருக்கு... வா..
என்னது...
வா...வா... நான் சொல்லறேன் லாஸ்ட் டைம் வந்தப்ப தண்ணீர் விடறேன்னு என்னைய குளிப்பாட்டி விட்டான். இன்றைக்கு மாட்டிக்க போறான். அவனது அருகில் நெருங்கியவள் ஒரு நொடியில் அவனது கையில் இருந்து பிடிக்கியவள் அவனது மேல் தண்ணீர் விட அடுத்த நொடி கீழே போட்டு விட்டு அண்ணா நான் வின் ஆயிடுட்டேன். சொன்னமாதிரி தண்ணீர் விட்டுவிட்டேன் என சிரிக்க...ஒரு நொடியில் அதை கையில் எடுத்தவன்
இருவர் மீதும் தண்ணீர் விட ஆரம்பித்தான்.
அபி வேண்டாம் என மலரும் அண்ணா வேண்டாம் என தாரிகாவும் கத்த மாமா என ஓடி வந்த பூஜாவிடம் பைப்பை தந்தவன் அவளை தோளில் தூக்கியபடி நீ அடி செல்லம்... மாமா வேடிக்கை பார்க்கிறேன் என நிற்க..அவர்கள் நகர்ந்த பக்கம் துரத்தியபடி தண்ணீரை பிய்ச்சி அடிக்க... பூஜாவிற்கு அவ்வளவு சந்தோஷம். .. சிரித்தபடி அம்மாவின் மேல் மலரின் மேல் என மாறி மாறி தண்ணீரை ஊற்றிக் கொண்டு இருந்தாள். அடுத்த பத்தாவது நிமிடம் தேவகி துண்டோடு வந்திருந்தார். தெரியுமே இது தான் நடக்கும்ன்னு பூஜாவுக்கு சளி பிடிச்சிட போகுது... இறக்கி விடு அபி.. போய் துணியை மாத்திட்டு வாங்க... பாட்டி ரொம்ப நேரமாக காத்து இருக்கறாங்க உங்கள் பார்க்க...
ஸாரி மா...இதோ போகிறேன் என அபியும் கூடவே இவர்களும் நகர்ந்தனர்.