அத்தியாயம் – 12
அவர்களை அதிர வைத்த சுமிம்மா அடுத்த நொடியே, “ஏன் நித்தியைப் பார்த்தால் என்னோட மகள் மாதிரி தெரியலையா..?” என்றவர் சிரித்துக்கொண்டே கேட்க, “நிஜமாவே தெரியல சுமிம்மா..” என்றாள் அனிதா பாவமாக..!
அவளின் பேச்சில் அவருக்கு சிரிப்பு வந்துவிட, “நித்தி எனக்காக அமைதியாக இருந்தா.. அவளோட வாலுத்தனம் எல்லாம் வீட்டிற்குள் தான்..” என்ற சுமிம்மா மகளைத் தோளோடு அணைத்துக் கொண்டார்..
“சுமிம்மா உங்களோட இடத்தில் வேற யார் இருந்தாலும் இப்படி இருக்க மாட்டாங்க..” என்றவன் சொல்ல, “யார் எப்படியோ எனக்கு தெரியாது நான் இப்படித்தான்.” என்றவர் புன்னகையுடன்..
“உங்களுக்கு குழந்தை இல்லை என்றுதானே அந்த பாட்டு பாடி இருக்கீங்க..” என்று மகேஷ் கேட்க, “எனக்கு குழந்தை இல்லை என்று யார் சொன்னாது.. எனக்கு மொத்தம் பத்து பிள்ளைகள்..” என்றவர் குறும்புடன் விழிகளை சுழற்றினார்..
அதிலேயே அவர்களுக்கு அர்த்தம் புரிந்துவிட, “நாங்களும் உங்க பிள்ளைகளா சுமிம்மா..” என்று எல்லோரும் சேர்ந்து கேட்க, “ஆமா.. என்னோட பிள்ளைகள்தான்..” என்றவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்..
“நீங்க விவரம் தெரியாத வயசில் எங்களோட விரல் பிடிச்சு நடக்க கற்றுக்கொடுக்கிறோம்.. அதே மாதிரி வயதான காலத்தில் நீங்க எங்களோட ஆசையை புரிந்து அதுக்கு ஏற்ற மாதிரி நடக்கக்கூடாதா..?” என்றவர் கேட்ட மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்..
“ஆனால் என்னோட பிள்ளைகள் ஒரு இடத்தில் கூட என்னை கேலியோ கிண்டலோ செய்யாம என்னோட கைகோர்த்து சிரித்து பேசி விளையாடி என்னால இந்த நாளை மறக்கவே முடியாது..” என்றவர் மகிழ்ச்சியுடன் கூறினார்..
“அதெல்லாம் சரிம்மா மாப்பிள்ளை யாரு என்று நீங்க சொல்லவே இல்ல..” என்று சசிதரன் கேட்க, “நானே இன்னும் என்னோட மருமகனைப் பார்க்கல..” என்றவர் புன்னகையுடன் கூறினார்..
“உங்களோட மகள் பார்த்துடாங்களா..?” என்று கார்த்திகா நித்தியைக் கிண்டல் செய்ய, “அம்மா எனக்கு போட்டோ காட்டவே இல்ல..” என்றவள் புன்னகைக்க, ‘போட்டோ வேணுமா..?’ என்றவன் சைகை செய்தான்..
அவள் தலையைக் குனிந்து கொள்ள, “இன்னும் ஒரு நிமிஷம் தான் இருக்கு..” என்று சங்கரி சொல்ல, “ஆமா நானே மறந்துட்டேன் பாரு..” என்ற அனிதா தன்னுடைய பையில் இருந்து எதையோ எடுக்க குனிந்தாள்..
“இருவரும் என்னவோ சொல்றீங்க.. ஆனால் என்ன சொல்றீங்க என்று புரியல..” என்று மகேஷ் புலம்பிட, “ஒரு நிமிஷம் பொறுங்க பாஸ் எல்லாம் புரியும்..” என்றாள் கார்த்திகா..
அனிதா கவரில் இருந்து கேக்கை எடுத்து சீட்டில் வைக்க சங்கரி மெழுகுவர்த்தி வைக்க கார்த்திகாவும், வித்யாவும் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றினார்..
ஆண்கள் நால்வரும் கேள்வியுடன் அவர்களைப் பார்க்க சுமிம்மாவோ, “என்ன நடக்குது இங்கே..?” என்று கேட்க, “ஹப்பாடா பழைய சுமிம்மா திரும்ப வந்துட்டாங்க..” என்றாள் கார்த்திகா..
“அதை நான் சொல்றேன்..” என்ற சங்கரி நிரஞ்சனின் காதில் ஏதோ சொல்ல அவன் அதை மற்றவர்களிடம் கூறினான்.. சுமிம்மாவை தவிர மற்ற எல்லோருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது..
“மணி பன்னிரண்டு..” என்ற சங்கரியின் குரல்கேட்டு ஒருவன் திரும்பிப் பார்த்தான்.. அவனையெல்லாம் அவள் கவனிக்கவே இல்லை..
“சுமிம்மா கேக் கட் பண்ணுங்க..” என்றவள் கத்தியை அவரிடம் கொடுக்க, “எதுக்கு என்று எல்லோரும் முதலில் சொல்லுங்க..” என்றவர் ஆர்வமாக கேட்டார்..
“ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரீ..” என்று அனிதா குஷியாக சொல்ல, “ஹாப்பி மதர்ஸ் டே சுமிம்மா..” என்று எல்லோரும் கோரஸாக சொல்ல, “இன்னைக்கு மதர்ஸ் டேவா..” என்றவர் கேக் கட் பண்ணி முதலில் சங்கரிக்கு ஊட்டினார்.. இவர்களின் சத்தம்கேட்டு பக்கத்து கம்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் கூட வந்து எட்டிப்பார்த்துவிட்டு சென்றனர்.. அடுத்து வரிசையாக எல்லோருக்கும் கேக்கை ஊட்டினார் சுமிம்மா..
“நானும் எல்லோருக்கும் ஒவ்வொரு பொருள் வாங்கியிருக்கேன்..” என்றவர் தன்னுடைய பேக்கை திறந்து பார்சலை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தார்.. எல்லோரும் ஒரே நேரத்தில் ஆர்வத்துடன் பார்சலைப் பிரித்துப் பார்த்தனர்..
பெண்களுக்கு பட்டுபுடவை ஒரே மாதிரி, ஆண்களுக்கு பட்டுவேட்டி சட்டை.. அதுபோக வித்யாவிற்கு நாவல்கள், அனிதாவிற்கு ஒரு செல், கார்த்திகாவிற்கு அழகான ரோஜா பூச்செடி, அதேபோல சசிதரனுக்கு ஒரு பேனா, மகேஷ்க்கு ஒரு மேமரிகார்ட், கௌசிக் ஒரு பெயிண்டிங் எல்லாம் இருந்தது..
“என்னம்மா இதெல்லாம்..” என்றவர்கள் கேட்க, “உனக்கு நாவல் படிக்க பிடிக்கும் என்று நாவல் வாங்கினேன்.. ஆனால் அதை எழுத ஒரு ஆள் வேணும் என்று சசிக்கு பேனா..” என்றவர் புன்னகைக்க, ‘ஐயோ மாட்டிகிட்டோமே..’ என்று இருவரும் நாக்கைக் கடித்தனர்..
“அனிதா உனக்கு சாங் கேட்க பிடிக்கும் என்று செல்வாங்கிக் கொடுத்தேன்.. மகேஷ் நீ உன்னோட மெமரியை அனிக்கிட்ட கொடுத்துவிட்டதாக ஒரு தகவல்.. அதனால உனக்கு மேமரிகார்ட் வாங்கினேன்..” என்றவர் சொல்ல இருவரும் தலையைக் குனிந்து கொண்டனர்..
“கார்த்திகா நீ வெளிநாடு போய் அந்த ரோஜாவைப் பார்க்கும் வரை இந்த ரோஜா செடியை வளர்க்க பாரு.. அப்போதான் அங்கே போகவேண்டும் என்ற எண்ணம் மனசில் இருந்துட்டே இருக்கும்..” என்றவர் கௌசிக் பக்கம் திரும்ப, “அம்மா இது உங்களோட பெயிண்டிங்.. என்னோட அம்மாவைப் பார்த்த மாதிரியே இருக்கு..” என்றவன் சந்தோஷத்தில் கூறினான்..
“சுமிம்மா கண்ணில் மண்ணைத் தூவ யாரால் முடியும்..?” என்றவர் சுடிதாரின் காலரைத் தூக்கிவிட நிரஞ்சனும், நித்திலாவும் சிரிக்க, “சங்கரிக்கு என்னம்மா கிப்ட்..” என்று கேட்க, “அவளுக்கு நாளை தருகிறேன்..” என்றார்..
“நிரஞ்சனுக்கும் – நித்திக்கும் நீங்க எந்த கிப்ட்யும் கொடுக்கல..” என்றவர்கள் எல்லோரும் கேட்க, “ரஞ்சன் தம்பி உங்களுக்கு கிபிட் கிடையாதுங்க..” என்றவர் தொடர்ந்து, “உனக்கும் கிப்ட் கிடையாது..” என்று மகளிடம் கூறியவர் மெளனமாக புன்னகைத்தார்..
“அதெல்லாம் முடியாது.. இவங்களோட கிபிட் காட்டுங்க..” என்று அனிதா அவரிடம் அடம்பிடிக்க, “நாளைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ குட்டிமா..” என்றார் சுமிம்மா..
அவர்களும் சரியென தலையசைக்க எல்லோரும் உறங்க செல்ல சங்கரி மட்டும் உறங்காமல் விடியும் வரை விழித்திருந்தாள்.. அவளின் பயமரிந்த சுமிம்மா அவளின் அருகில் இருக்க மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..
அவன் எழுந்ததும் முதலில் பார்த்தது சங்கரியின் முகத்தை மட்டுமே.. அன்று ரயில் ரொம்பவே தாமதமாகவே செல்ல மணி பத்து ஆனதும் எல்லோரும் சங்கரியிடம் இருந்து நம்பரை வாங்கி ரிசல்ட் பார்த்தனர்.. சங்கரியின் பயம் அதிகரிக்க அவளோ பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள்..
யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் டவர் கிடைக்காமல் போக, “என்ன டவர் கிடைக்கவே இல்ல..ரிசல்ட் வேற பார்க்கணும்..” என்று எல்லோரும் புலம்ப, “அவங்க தான் இந்தமுறை ஸ்டேட் பர்ஸ்ட்..!” என்றான் அவன்..
“நிஜமாவா..?” என்று சங்கரி துள்ளிக்குதிக்க, “மார்க் என்னப்பா..” என்று சுமிம்மா கேட்க, “1197” என்றான் அவன்..[நான் இப்பொழுது சிஸ்டம் படி சொல்லல.. யாரும் என்னிடம் சண்டைக்கு வரப்பிடாது..]
அவளின் மார்க்கேட்டு எல்லோரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல, “இந்த உனக்கான பரிசு..” என்று சுமிம்மா அவளின் கையில் பாஸ்புக்கை கொடுக்க, “இது எதுக்கும்மா..” என்று கேட்டாள் சங்கரி..
“உன்னோட படிப்பிற்கு என்று 5௦,௦௦௦ ரூபாய் பேங்கில் டெபாசிட் பண்ணிருக்கேன்..” என்றவர் சொல்லி மற்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திட, “அம்மா நான் இதை எதிர்பார்க்கல..” என்று திகைப்புடன் கோரசாக கூறினார்..
அவரிடம் இருந்து யாருமே இப்படியொரு செயலை எதிர்பார்க்கவில்லை.. நீ என்ன மற்றவருக்கு தருகிறாயோ அது உனக்கே திரும்ப கிடக்கும் அதைவிட இரட்டிப்பாக..! அதற்கு சிறந்த உதாரணம் சுமிம்மா..!
அவர்கள் பாசத்தை வாரி வழங்கிட, தன்னுடைய பிள்ளைக்கு என்ன செய்வாரோ அதை அவர்களுக்கும் சேர்த்து செய்தார்.. அதிலிருந்தே அவரின் பாசம் எத்தகையது என்று மற்றவர்கள் உணர்ந்தனர்..
அதற்குள் ரயில் கன்னியாகுமரி வந்துவிட எல்லோரும் வண்டியைவிட்டு கீழிறங்க செல்ல, “ஒரு நிமிஷம்..”என்றவன் அவளை வழிமறிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் சங்கரி.. இப்பொழுதுதான் காலேஜ் முடித்துவிட்டு வந்தவன் போல இருந்தது அவனின் தோற்றம்..!
அவனின் தோற்றம் வைத்தே வயதை அவள் கணக்கிட்ட அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவன், “என்னோட பெயர் பிரவீன்.. எனக்கு உன்னோட துருதுருப்பு ரொம்ப பிடிச்சிருக்கு.. சீக்கிரமே உன்னைத் தேடி வருவேன்..” என்றவன் இமைக்கும் நொடியில் அவனின் மனதை சொல்லிவிட்டான்..
அவள் திகைத்து நிற்க, “உன்னை எல்லோரும் வெளியே எதிர்பார்த்துட்டு இருக்கிறாங்க..” என்றவன் சொல்ல அவளும் மெல்ல ரயிலைவிட்டு கீழிறங்கிச் செல்ல, ‘அவன் அவளை மீண்டும் சந்திக்க வாய்ப்பு இருக்குமா..?’ அவளுக்கு தெரியவில்லை.. ஆனாலும் மனதில் ஒரு படப்படப்பு..!